என்.ஆர்.சி., குறித்து பொய் பரப்பும் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிய பாஜக., புகார்!

police complaint against kejriwal and saurabh bharadwaj - 2026

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சௌரப் பரத்வாஜ் ஆகியோருக்கு எதிராக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போலீஸில் புகார் அளித்துள்ளார்! அந்தப் புகாரில் என்.ஆர்.சி குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் ஆகியோர் தில்லியில் என்.ஆர்.சி அமலாக்கம் தொடர்பாகவும், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒப்பிடுவது குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பியுள்ளதாக மிஸ்ரா புகாரில் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் தெரிந்தே தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) குறித்து பொய்யை ஊடகங்களில் பரப்பினார்! இதனால் பொதுமக்கள் என்.ஆர்.சி பற்றி அச்சத்துடன் இருப்பார்கள், இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு வழிவகுக்கும்.

தில்லியில் என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால், தேசிய தலைநகரில் பணியில் வசிக்கும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள் தில்லியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் அவரது உதவியாளர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பரத்வாஜ் ஆகியோர் பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.

மாநிலம் விட்டு மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் குடிபெயர்ந்த தொழிலாளர்களை, சட்டவிரோதமாக வேற்று நாடுகளில் இருந்து குடியேறியவர்களுடன் ஒப்பிடுவது, தில்லியை தங்கள் வீடாக மாற்றியவர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். தில்லியில் மக்கள் கோபமாக உள்ளனர், இது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும். சட்டவிரோத ரோஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்களைக் காப்பாற்றுவதற்கும், இந்த சட்டவிரோத குடியேறியவர்களை அடையாளம் காண முயற்சிக்கும் மத்திய அரசின் செயல்பாட்டில் தடைகளை உருவாக்குவதற்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சூழ்ச்சியாக உள்ளது இது என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது வதந்திகளை பரப்பியமை, சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை உருவாக்க முயன்றது, சமூக ஊடகங்களில் பொய்களை பரப்பியது மற்றும் தேசிய தலைநகரில் பீகார் மற்றும் உத்தரபிரதேச குடியேறியவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக தில்லி போலீசில் வழக்கு பதிவு செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.

புதன்கிழமை, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊடக கேள்விக்கு பதிலளிக்கும் போது குடியுரிமை மற்றும் குடியிருப்பு பதிவேடு குறித்த தனது அறியாமையை வெளிப்படுத்தினார்.

தில்லியில் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சட்டவிரோத குடியேறியவர்கள் இங்கே இருப்பதால் தில்லியின் நிலைமை மோசமடைந்து வருகிறது என்று தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். பாஜக அரசு அஸ்ஸாமில் செய்ததைப் போலவே தில்லியிலும் என்ஆர்சியை செயல்படுத்தவேண்டும் என்றார் திவாரி !

நாட்டில் வாழும் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காண்பதில், என்.ஆர்.சி உதவுகிறது. இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, வேறுபட்ட மாநிலங்களில் வாழும் இந்தியர்களை இலக்காகக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், சாமானியர்களை முட்டாளாக்க பெரும்பாலும் மலிவான தந்திரங்களை நாடிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகின்றனர்.

முன்னதாக, டில்லியில் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால், மாநில, பாஜக., தலைவர் மனோஜ் திவாரி தான், முதல் ஆளாக டில்லியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்,” என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்திருந்தார்.

வங்க தேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவி, அசாம் மாநிலத்தில், சட்டவிரோதமாக வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக அண்மையில் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த பதிவேட்டில், 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதால், நாடு முழுவதும் சர்ச்சைஎழுந்துள்ளது.

திவாரியின் பேச்சுக்கு பதிலளிப்பது போல், அரவிந்த் கேஜ்ரிவால் கூறிய போது, வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டுக்குள் ஊடுருவி, சட்டவிரோதமாக வசிப்பதை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. தில்லியில், இந்த திட்டத்தை செயல்படுத்தினால், மனோஜ் திவாரி தான், முதலில், டில்லியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றார். கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories