மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவிய இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களின் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எப்போதும் உற்சாகமாக வீரர்களை வரவேற்கக் காத்திருக்கும் ரசிகர்கள் இந்தமுறை இல்லை. விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் வந்திறங்கினார். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. உடன் பின்னால் ஜடேஜாவும் சோகமான முகத்துடன் வந்தார். இந்நிலையில் தோனியின் வருகையை எதிர்நோக்கியிருப்பதாக அவரது மனைவி சாக்ஷி டிவிட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நமது அணிக்காக கடுமையாக போராடினீர்கள். பெருமைப்படுகிறேன். சிலவற்றில் வெல்லலாம், சிலவற்றை இழக்கலாம். ஆனால் செய்த தியாகங்கள் மதிப்புக்குரியவை என்றுள்ளார்…
தோல்வியுடன் திரும்பிய இந்திய வீரர்கள்: வரவேற்பு பலமில்லை; பாதுகாப்பு பலம்
Published:

