பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலைத் தொடங்கியது இந்திய ராணுவம்!

army attack - 2026

எல்லையில் இந்தியா தாக்குதலை துவக்கியது! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடும் தாக்குதல் தொடங்கியுள்ளது. காஷ்மீர் தாங்தார் எல்லை அருகே பாக். பயங்கரவாத முகாம்கள் மீது பீரங்கிகள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது! எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (கட்டுப்பாடு) வழியாக, பயங்கரவாதிகளை கடக்க பாகிஸ்தான் உதவி புரிந்ததை அடுத்து, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறும் முயற்சியில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல், தங்தார் செக்டாரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, இந்திய இராணுவம் தனது பீரங்கித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தாக்கி வருகிறது! பாகிஸ்தான் ராணுவம், தங்களது ஜிஹாதி பயங்கரவாதிகளை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தாங்கள் முறைகேடாக ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து அனுப்ப தீவிரமாக முயன்று வருகிறது.

பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. முன்னதாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிர் தியாகம் செய்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

எல்லையையொட்டிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

எல்லை அருகே பாகிஸ்தானில் பயங்கரவாதிகள், 20 முகாம்கள் அமைத்து, இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இந்த தீவிரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி வருவதாகவும் உளவுத்துறை கூறியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், காஷ்மீரை ஒட்டி அமைந்துள்ள எல்லைப் பகுதியில், துருப்புகளை அதிகரித்திருப்பதோடு, கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில், இந்திய துருப்புகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டாங்தார் மண்டலத்திற்குட்பட்ட குப்வாரா பகுதியில், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில், ராணுவ நிலைகளுக்கு அருகில் இருந்த இரண்டு வீடுகள் பலத்த சேதத்தை எதிர்கொண்டன. இந்த சம்பவத்தில், குப்வாரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்திருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் பாகிஸ்தான் தரப்பில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories