December 5, 2025, 6:53 PM
26.7 C
Chennai

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலைத் தொடங்கியது இந்திய ராணுவம்!

army attack - 2025

எல்லையில் இந்தியா தாக்குதலை துவக்கியது! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடும் தாக்குதல் தொடங்கியுள்ளது. காஷ்மீர் தாங்தார் எல்லை அருகே பாக். பயங்கரவாத முகாம்கள் மீது பீரங்கிகள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது! எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (கட்டுப்பாடு) வழியாக, பயங்கரவாதிகளை கடக்க பாகிஸ்தான் உதவி புரிந்ததை அடுத்து, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறும் முயற்சியில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல், தங்தார் செக்டாரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, இந்திய இராணுவம் தனது பீரங்கித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தாக்கி வருகிறது! பாகிஸ்தான் ராணுவம், தங்களது ஜிஹாதி பயங்கரவாதிகளை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தாங்கள் முறைகேடாக ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து அனுப்ப தீவிரமாக முயன்று வருகிறது.

பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. முன்னதாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிர் தியாகம் செய்தனர்.

எல்லையையொட்டிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

எல்லை அருகே பாகிஸ்தானில் பயங்கரவாதிகள், 20 முகாம்கள் அமைத்து, இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இந்த தீவிரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி வருவதாகவும் உளவுத்துறை கூறியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், காஷ்மீரை ஒட்டி அமைந்துள்ள எல்லைப் பகுதியில், துருப்புகளை அதிகரித்திருப்பதோடு, கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில், இந்திய துருப்புகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டாங்தார் மண்டலத்திற்குட்பட்ட குப்வாரா பகுதியில், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில், ராணுவ நிலைகளுக்கு அருகில் இருந்த இரண்டு வீடுகள் பலத்த சேதத்தை எதிர்கொண்டன. இந்த சம்பவத்தில், குப்வாரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்திருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் பாகிஸ்தான் தரப்பில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories