பீட்டாவுக்கு தடை கோரும் அமெரிக்கர்கள்: விலங்குகளை கொல்வதாக குற்றச்சாட்டு!

வாஷிங்டன்(யு.எஸ்): இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தொடங்கியுள்ளது.

பீட்டா அமைப்பின் காப்பகத்திற்கு வரும் விலங்குகளில் 97 சதவீதம் கொல்லப்படுகிறது என்று அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

சராசரியாக ஒவ்வொரு வேலை நாளன்றும் 6 விலங்குள் கொல்லப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் எதிர்ப்பு அமைப்பினர்.

1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பீட்டா அமைப்பு, தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதாகும். அமைப்பிற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு அமெரிக்க வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந் நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் (Center for Consumer Freedom) என்ற மற்றுமொரு தொண்டு நிறுவனம் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பீட்டா விலங்குகளைக் கொல்கிறது’ என்ற பெயரில் ஆதரவு திரட்டி வருகிறார்கள். Petakillsanimals.com என்ற இணையதளத்தில் பீட்டாவுக்கு எதிரான விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

நாடெங்கிலும் Petakillsanimals என்ற முழக்கத்துடன் விளம்பரப்பலகைகள் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் தகவல்ப்படி 1998 ஆம் ஆண்டிலிருந்து 34 ஆயிரம் வீட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.

வெர்ஜினியா கால்நடைத் துறையின் 2010ம் ஆண்டு ஆய்வின் படி 84 சதவீத நாய்களும் பூனைகளும், காப்பகத்திற்கு வந்த 24 மணி நேரத்திற்குள் கொல்லப்படுகிறதாம்.

பீட்டா அதிகாரிகள் மீது விலங்குகளை துன்புறுத்தியதற்காக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக petakillsanimals.com இணையதளத்தில் கூறியுள்ளனர். பீட்டாவுக்கு எதிரான மேலும் பல தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகளில் பீட்டாவுக்கு எதிரான விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவின் விலங்குகள் பராமரிப்பை குற்றம் சாட்டி அதன் தலைமையிடம் அமைந்துள்ள அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories