December 5, 2025, 3:57 PM
27.9 C
Chennai

பீட்டாவுக்கு தடை கோரும் அமெரிக்கர்கள்: விலங்குகளை கொல்வதாக குற்றச்சாட்டு!

வாஷிங்டன்(யு.எஸ்): இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தொடங்கியுள்ளது.

பீட்டா அமைப்பின் காப்பகத்திற்கு வரும் விலங்குகளில் 97 சதவீதம் கொல்லப்படுகிறது என்று அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

சராசரியாக ஒவ்வொரு வேலை நாளன்றும் 6 விலங்குள் கொல்லப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் எதிர்ப்பு அமைப்பினர்.

1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பீட்டா அமைப்பு, தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதாகும். அமைப்பிற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு அமெரிக்க வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந் நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் (Center for Consumer Freedom) என்ற மற்றுமொரு தொண்டு நிறுவனம் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பீட்டா விலங்குகளைக் கொல்கிறது’ என்ற பெயரில் ஆதரவு திரட்டி வருகிறார்கள். Petakillsanimals.com என்ற இணையதளத்தில் பீட்டாவுக்கு எதிரான விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

நாடெங்கிலும் Petakillsanimals என்ற முழக்கத்துடன் விளம்பரப்பலகைகள் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் தகவல்ப்படி 1998 ஆம் ஆண்டிலிருந்து 34 ஆயிரம் வீட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.

வெர்ஜினியா கால்நடைத் துறையின் 2010ம் ஆண்டு ஆய்வின் படி 84 சதவீத நாய்களும் பூனைகளும், காப்பகத்திற்கு வந்த 24 மணி நேரத்திற்குள் கொல்லப்படுகிறதாம்.

பீட்டா அதிகாரிகள் மீது விலங்குகளை துன்புறுத்தியதற்காக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக petakillsanimals.com இணையதளத்தில் கூறியுள்ளனர். பீட்டாவுக்கு எதிரான மேலும் பல தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகளில் பீட்டாவுக்கு எதிரான விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவின் விலங்குகள் பராமரிப்பை குற்றம் சாட்டி அதன் தலைமையிடம் அமைந்துள்ள அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories