புது தில்லி: ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீதான வான்வழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏமனில் 3500-4000 இந்தியர்கள் இருப்பதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருத்தீன் தெரிவித்துள்ளார். இதற்காக தான் ஏமன் செல்லவிருப்பதை நேற்று டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட அவர், அவர்களை அழைத்து வர விமானத்தை அனுப்புவதையும், இந்தியக் குழு அவர்களை பாதுகாப்பாக அழைத்துவர உடன் இருப்பதையும் தெரிவித்துள்ளார்.
Leaving Yemen. 80 Indians on Yemenia Airways 1st flight from Sanaa today. Head to Djibouti. Indian Mission will assist in their journey home — Syed Akbaruddin (@MEAIndia) March 28, 2015


