கடன்களுக்கான வட்டி விகிதம்; வங்கிகள் குறைத்தன

கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள் குறைத்துள்ளன. 

புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக நேற்று முன் தினம் உரையாற்றிய பிரதமர் மோடி வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு எதிரொலியாக நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவீதம் குறைத்துள்ளது.

அதன்படி ஒரு வருட கால கடன்களுக்கான வட்டி விகிதம் 8.9 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைந்துள்ளது. மற்ற கால வரைமுறை அளவிலான கடன்களுக்கான வட்டிகளும் 0.9 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளன. யூனியன் பேங்க் ஆப் இந்தியா 0.65 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஐடிபிஐ வங்கி மூன்று
வருட கால நிர்ணய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீத அளவிற்கு குறைத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவையும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை பெருமளவு அதிகரித்ததையடுத்து, இந்த வட்டிக் குறைப்பு அறிவிப்பை வங்கிகள் வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பையடுத்து வீட்டுக்கடன், கார் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவு குறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories