சந்திரபாபுவை மக்கள் முன் நிற்க வைத்து அவர் துணிகளை அவிழ்ப்போம்: சபாநாயகர்!

andhra speaker - 2026

சந்திரபாபுவின் வண்டவாளத்தை எல்லாம் வெளிப்படுத்துவோம்; மக்கள் முன்னால் நிற்க வைத்து அவருடைய துணிகளை அவிழ்ப்போம் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஆந்திர மாநில சபாநாயகர் தம்மினேனி சீதாராம்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திரா சபாநாயகர் தம்மினேனி சீதாராம் மிகக் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசினார். அக்ரிகோல்டு விஷயத்தில் கடந்த அரசு மோசடியில் ஈடுபட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஹாய்லேண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கு சந்திரபாபுவும் லோகேஷும் திட்டமிட்டார்கள் என்றும், அக்ரி கோல்டோடு தனக்கு தொடர்பு இல்லை என்று சந்திரபாபு அறிவிப்பாரா என்றும் சவால் விட்டார் தம்மினேனி சீதாராம்!

சந்திரபாபுவின் வண்டவாளத்தை எல்லாம் வெளிப்படுத்துவோம் என்றும், அவரை மக்கள் முன்னால் நிற்க வைத்து அவருடைய துணிகளை அவிழ்ப்போம் என்றும் மிகக் கடுமையான வாசகங்களையும் மொழிந்தார்.

தனக்கு எத்தனையோ அனுபவம் உண்டு என்று கூறிக் கொள்ளும் சந்திரபாபு, அந்த அனுபவங்களை மடித்து வேறெங்காவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தேர்தலின் முன்பு ரூ.10,000 கொடுப்பேன் என்று கூறி அனைவரிடமிருந்தும் பெயர் கூட பதிவு செய்துகொண்டு, பின்னர் அவர் எதுவும் தரவில்லை என்று குற்றம் சாட்டினார். அரசாங்கமே ஊழல்களில் ஈடுபட்டால் மக்களின் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

கண் முன்பே அநியாயம் நடக்கையில் சபாநாயகர் தட்டிக் கேட்க கூடாதா என்றார். தாம் முதலில் ஒரு எம்எல்ஏ என்றும் அடுத்துதான் தாம் சபாநாயகர் என்றும் கூறினார் தம்மினேனி சீதாராம்.

சந்திரபாபு ஒவ்வொன்றையும் மாயம் செய்து விடுபவர்; அவர் பெரிய மோசக்காரர் என்று விமர்சித்தார். ‘யனமுல’ ராமகிருஷ்ணுடு, சியெம் ரமேஷ் முதலானோர் அக்ரிகோல்டு சொத்துகளை விழுங்குவதற்கு முயற்சித்தார்கள் என்றும் தம்பினேனி குற்றம் சுமத்தினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories