சந்திரபாபுவை மக்கள் முன் நிற்க வைத்து அவர் துணிகளை அவிழ்ப்போம்: சபாநாயகர்!

Published:

andhra speaker - 2026

சந்திரபாபுவின் வண்டவாளத்தை எல்லாம் வெளிப்படுத்துவோம்; மக்கள் முன்னால் நிற்க வைத்து அவருடைய துணிகளை அவிழ்ப்போம் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஆந்திர மாநில சபாநாயகர் தம்மினேனி சீதாராம்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திரா சபாநாயகர் தம்மினேனி சீதாராம் மிகக் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசினார். அக்ரிகோல்டு விஷயத்தில் கடந்த அரசு மோசடியில் ஈடுபட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஹாய்லேண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கு சந்திரபாபுவும் லோகேஷும் திட்டமிட்டார்கள் என்றும், அக்ரி கோல்டோடு தனக்கு தொடர்பு இல்லை என்று சந்திரபாபு அறிவிப்பாரா என்றும் சவால் விட்டார் தம்மினேனி சீதாராம்!

சந்திரபாபுவின் வண்டவாளத்தை எல்லாம் வெளிப்படுத்துவோம் என்றும், அவரை மக்கள் முன்னால் நிற்க வைத்து அவருடைய துணிகளை அவிழ்ப்போம் என்றும் மிகக் கடுமையான வாசகங்களையும் மொழிந்தார்.

தனக்கு எத்தனையோ அனுபவம் உண்டு என்று கூறிக் கொள்ளும் சந்திரபாபு, அந்த அனுபவங்களை மடித்து வேறெங்காவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

தேர்தலின் முன்பு ரூ.10,000 கொடுப்பேன் என்று கூறி அனைவரிடமிருந்தும் பெயர் கூட பதிவு செய்துகொண்டு, பின்னர் அவர் எதுவும் தரவில்லை என்று குற்றம் சாட்டினார். அரசாங்கமே ஊழல்களில் ஈடுபட்டால் மக்களின் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

கண் முன்பே அநியாயம் நடக்கையில் சபாநாயகர் தட்டிக் கேட்க கூடாதா என்றார். தாம் முதலில் ஒரு எம்எல்ஏ என்றும் அடுத்துதான் தாம் சபாநாயகர் என்றும் கூறினார் தம்மினேனி சீதாராம்.

சந்திரபாபு ஒவ்வொன்றையும் மாயம் செய்து விடுபவர்; அவர் பெரிய மோசக்காரர் என்று விமர்சித்தார். ‘யனமுல’ ராமகிருஷ்ணுடு, சியெம் ரமேஷ் முதலானோர் அக்ரிகோல்டு சொத்துகளை விழுங்குவதற்கு முயற்சித்தார்கள் என்றும் தம்பினேனி குற்றம் சுமத்தினார்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img