December 6, 2025, 1:21 AM
26 C
Chennai

சந்திரபாபுவை மக்கள் முன் நிற்க வைத்து அவர் துணிகளை அவிழ்ப்போம்: சபாநாயகர்!

andhra speaker - 2025

சந்திரபாபுவின் வண்டவாளத்தை எல்லாம் வெளிப்படுத்துவோம்; மக்கள் முன்னால் நிற்க வைத்து அவருடைய துணிகளை அவிழ்ப்போம் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஆந்திர மாநில சபாநாயகர் தம்மினேனி சீதாராம்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திரா சபாநாயகர் தம்மினேனி சீதாராம் மிகக் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசினார். அக்ரிகோல்டு விஷயத்தில் கடந்த அரசு மோசடியில் ஈடுபட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஹாய்லேண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கு சந்திரபாபுவும் லோகேஷும் திட்டமிட்டார்கள் என்றும், அக்ரி கோல்டோடு தனக்கு தொடர்பு இல்லை என்று சந்திரபாபு அறிவிப்பாரா என்றும் சவால் விட்டார் தம்மினேனி சீதாராம்!

சந்திரபாபுவின் வண்டவாளத்தை எல்லாம் வெளிப்படுத்துவோம் என்றும், அவரை மக்கள் முன்னால் நிற்க வைத்து அவருடைய துணிகளை அவிழ்ப்போம் என்றும் மிகக் கடுமையான வாசகங்களையும் மொழிந்தார்.

தனக்கு எத்தனையோ அனுபவம் உண்டு என்று கூறிக் கொள்ளும் சந்திரபாபு, அந்த அனுபவங்களை மடித்து வேறெங்காவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தேர்தலின் முன்பு ரூ.10,000 கொடுப்பேன் என்று கூறி அனைவரிடமிருந்தும் பெயர் கூட பதிவு செய்துகொண்டு, பின்னர் அவர் எதுவும் தரவில்லை என்று குற்றம் சாட்டினார். அரசாங்கமே ஊழல்களில் ஈடுபட்டால் மக்களின் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

கண் முன்பே அநியாயம் நடக்கையில் சபாநாயகர் தட்டிக் கேட்க கூடாதா என்றார். தாம் முதலில் ஒரு எம்எல்ஏ என்றும் அடுத்துதான் தாம் சபாநாயகர் என்றும் கூறினார் தம்மினேனி சீதாராம்.

சந்திரபாபு ஒவ்வொன்றையும் மாயம் செய்து விடுபவர்; அவர் பெரிய மோசக்காரர் என்று விமர்சித்தார். ‘யனமுல’ ராமகிருஷ்ணுடு, சியெம் ரமேஷ் முதலானோர் அக்ரிகோல்டு சொத்துகளை விழுங்குவதற்கு முயற்சித்தார்கள் என்றும் தம்பினேனி குற்றம் சுமத்தினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories