ஆந்திராவில் பொதுமக்கள் முன்னிலையில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., அமாஞ்சி கிருஷ்ணா பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிர்லா நகரை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உள்ளூர் பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., அமாஞ்சி கிருஷ்ணாவின் உறவினர் அவர் மீது உருட்டுக்கட்டையால் நடு வீதியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். இவ்வாறு பொதுமக்கள் முன்பே செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தெலுங்கு தேச எம்.எல்.ஏ.,வின் உறவினர் மீது ஆந்திர மாநில பிரகாசம் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கைதான் பார்த்தனர். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆந்திராவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
[embedyt] https://www.youtube.com/watch?v=qKt1XuC5Bo8[/embedyt]