பொதுமக்கள் முன்பே செய்தியாளர் மீது கொலைவெறித் தக்குதல்

Published:

ஆந்திராவில் பொதுமக்கள் முன்னிலையில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., அமாஞ்சி கிருஷ்ணா பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிர்லா நகரை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உள்ளூர் பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., அமாஞ்சி கிருஷ்ணாவின் உறவினர் அவர் மீது உருட்டுக்கட்டையால் நடு வீதியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். இவ்வாறு பொதுமக்கள் முன்பே செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தெலுங்கு தேச எம்.எல்.ஏ.,வின் உறவினர் மீது ஆந்திர மாநில பிரகாசம் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மக்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கைதான் பார்த்தனர். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆந்திராவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

[embedyt] https://www.youtube.com/watch?v=qKt1XuC5Bo8[/embedyt]

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img