நோட்டாவிடம் தோற்ற வாட்டாள்: தமிழர்கள் நிம்மதி

vattal nagaraj - 2026

தன்னைச் சுற்றி பத்து பதினைந்து ‛அல்லக்கை’களை வைத்துக்கொண்டு, தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி ஸ்டன்ட் செய்து வந்த வாட்டாள் நாகராஜ் என்ற கர்நாடக உள்ளூர் தலைவர் அம்மாநில இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்று போனார்.

நோட்டாவிற்கு 986 ஓட்டுகள் கிடைக்க, நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானைப் போல கர்நாடகாவில், கன்னட மொழி குறித்து தீவிரமாக பேசி வருபவர் வாட்டாள் நாகராஜ்.

கன்னட வெறியரான இவர், கன்னட சலுவலி வாட்டாள் பக்சி என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடும்போது எல்லாம், தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அளவில் போராட்டத்தை நடத்துவார். ஆதரவாளர்களுடன் தமிழகத்திற்குள் நுழைய பார்ப்பார்.

இந்நிலையில் கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சிவாஜி நகர் தொகுதியில் வாட்டாள் நாகராஜ் போட்டியிட்டார்.

பா.ஜ., சார்பில் தமிழரான முன்னாள் கவுன்சிலர் சரவணா, காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத், மஜதவின் தன்வீர் அகமது ஆகியோர் போட்டியிட்டனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில், வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அடுத்த இடத்தில், சிறுபான்மையினர் உள்ளனர். தமிழர் ஓட்டுகளை குறிவைத்தே, சரவணாவுக்கு பா.ஜ., வாய்ப்பு அளித்தது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று (டிச.,9) எண்ணப்பட்டன. சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத் வெற்றி பெற்றார். அவருக்கு 49,980 ஓட்டுகள் கிடைத்தன. சரவணாவுக்கு 36,369 ஓட்டுகளும், தன்விர் அகமதுக்கு 1098 ஓட்டுகளும் கிடைத்தன.

ஆனால், தீவிர கன்னட ஆதரவாளராக காட்டிக் கொண்ட வாட்டாள் நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில், நோட்டா 986 ஓட்டுகள் பெற்று, வாட்டாள் நாகராஜை தோற்கடித்தது.

வாட்டாள் நாகராஜ் தோற்றதால் தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories