நோட்டாவிடம் தோற்ற வாட்டாள்: தமிழர்கள் நிம்மதி

vattal nagaraj - 2026

தன்னைச் சுற்றி பத்து பதினைந்து ‛அல்லக்கை’களை வைத்துக்கொண்டு, தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி ஸ்டன்ட் செய்து வந்த வாட்டாள் நாகராஜ் என்ற கர்நாடக உள்ளூர் தலைவர் அம்மாநில இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்று போனார்.

நோட்டாவிற்கு 986 ஓட்டுகள் கிடைக்க, நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானைப் போல கர்நாடகாவில், கன்னட மொழி குறித்து தீவிரமாக பேசி வருபவர் வாட்டாள் நாகராஜ்.

கன்னட வெறியரான இவர், கன்னட சலுவலி வாட்டாள் பக்சி என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடும்போது எல்லாம், தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அளவில் போராட்டத்தை நடத்துவார். ஆதரவாளர்களுடன் தமிழகத்திற்குள் நுழைய பார்ப்பார்.

இந்நிலையில் கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சிவாஜி நகர் தொகுதியில் வாட்டாள் நாகராஜ் போட்டியிட்டார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

பா.ஜ., சார்பில் தமிழரான முன்னாள் கவுன்சிலர் சரவணா, காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத், மஜதவின் தன்வீர் அகமது ஆகியோர் போட்டியிட்டனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில், வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அடுத்த இடத்தில், சிறுபான்மையினர் உள்ளனர். தமிழர் ஓட்டுகளை குறிவைத்தே, சரவணாவுக்கு பா.ஜ., வாய்ப்பு அளித்தது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று (டிச.,9) எண்ணப்பட்டன. சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத் வெற்றி பெற்றார். அவருக்கு 49,980 ஓட்டுகள் கிடைத்தன. சரவணாவுக்கு 36,369 ஓட்டுகளும், தன்விர் அகமதுக்கு 1098 ஓட்டுகளும் கிடைத்தன.

ஆனால், தீவிர கன்னட ஆதரவாளராக காட்டிக் கொண்ட வாட்டாள் நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில், நோட்டா 986 ஓட்டுகள் பெற்று, வாட்டாள் நாகராஜை தோற்கடித்தது.

வாட்டாள் நாகராஜ் தோற்றதால் தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories