சுரேஷ் முதல் வில்சன் கொலை வரை! ‘ஜிஹாதி’ கரங்களை முடக்காததால்… தொடரும் வினை!

ssi shotmurder - 2026

சென்னையில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமாரைப் படுகொலை செய்தது முதல் வில்சன் எனும் எஸ்.எஸ்.ஐ., படுகொலை செய்யப் பட்டது வரை தொடரும் ஜிஹாதிகளின் படுகொலையை கண்டிக்காமலும், ஆதரவளித்தும் பேசும் திமுக., உள்ளிட்ட தமிழகத்தின் நாசகார அரசியல் சமூக இயக்கங்களின் செயல்பாடுகளால் இன்னும் எத்தனை உயிர்கள் ஜிஹாதுக்கு இரையாகப் போகின்றனவோ என்று அச்சத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்!

இன்று எஸ்.எஸ்.ஐ., வில்சன் படுகொலையில் தொடர்புடைய இருவரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கர்நாடக மாநில போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, நேற்று, இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு பயங்கரவாதியை பெங்களூரில் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்!

சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமாரை கடந்த 2014ஆம் வருடம் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்களைச் சேர்ந்த நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

விசாரணையில் சென்னை, கடலூர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இவரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுரேஷ்குமார் கொலைக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் சையது அலி நவாஸ், அப்துல் சலீம், காஜாமைதீன் ஆகியோர் சமீபத்தில் தில்லியில் கைது செய்யப்பட்டனர்.

kanyakumari police - 2026

இவர்கள் ஜிகாத் பெயரில் தமிழகத்தில் இந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளது தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் பெங்களூரில் இளநீர் வியாபாரிகள், சலவைத் தொழிலாளிகள் போல் தங்கியிருந்த ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த முகமது கனிஃப் கான் (23) இம்ரான்கான் (32), முகமது ஜெகித் (24) ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

suresh padi - 2026
padi suresh

இந்நிலையில் பெங்களூரில் ஓட்டுனராக பணியாற்றிய காஜா மொய்தீன் கூட்டாளி இஜாஸ் பாஷாவை தமிழக கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் களியக்காவிளை சிறப்பு எஸ்ஐ வில்சன் படுகொலை குறித்து விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் வில்சன் கொலை தொடர்புள்ளவர்களாக கருதப் படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இவர்கள் இருவர் குறித்தும் துப்பு கொடுத்தால், ரூ. 7 லட்சம் சன்மானம் வழங்கப் படும் என்றெல்லாம் கன்னியாகுமரி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories