ஹெரால்டு வழக்கு விவகாரத்தில்சோனியா, ராகுலிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் முறைகேடான வழியில் அபகரித்ததாக, சுப்பிரமணிய சுவாமி thilli niithimanRaththil vazakku தொடர்ந்தார்.
கடந்த, 1938ம் ஆண்டில், சுதந்திர போராட்டத்தின் போது, ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை.’அசோசியேட் ஜர்னல் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் கீழ், நேஷனல் ஹெரால்டு என்ற ஆங்கில பத்திரிகையும், குவாமி ஆவாஸ் என்ற உருது பத்திரிகையும், நவ்ஜீவன் என்ற ஹிந்தி பத்திரிகையும் வெளி வந்தன.
கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், 2008 ஏப்ரல்,1ம் தேதி, இந்த பத்திரிகைகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் வாங்கிய, 90 கோடி ரூபாய் கடன் உள்ளிட்டவற்றால் திணறிய, அசோசியேட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், யங் இந்தியன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள, 5,000 கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிக்கும் வகையிலேயே இந்த நிறுவன பங்குகள் கைமாற்றப்பட்டது’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தொடர்ந்தார்.
இந்த வழக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்க டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்,இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சோனியா, ராகுலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.