வெள்ளி நாளை சுரேஷ் ரெய்னாவுக்கு திருமணம்: தோழியை கரம்பிடிக்கிறார்

Published:

புது தில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நாளை வெள்ளிக்கிழமை தனது தோழியை திருமணம் செய்து கொள்கிறார். இதை அடுத்து, திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை முதலே துவங்கிவிட்டன. புது தில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரெய்னா மற்றும் அவரது தோழி பிரியங்காவின் குடும்பத்தினர் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ரெய்னா, இந்தியா திரும்பியதும், அவரது திருமண ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை முதலே திருமண நிகழ்ச்சிகள் களை கட்டத் தொடங்கி விட்டன. சுரேஷ் ரெய்னாவின் தாயாரின் நெருங்கிய தோழியின் மகளையே ரெய்னாவுக்குப் பேசி முடித்தனர். இதை அடுத்து, ரெய்னாவின் தோழியான பிரியங்கா சௌத்ரியுடன் நாளை திருமணம் நடைபெறுகிறது. பிரியங்கா சௌத்ரி தற்போது நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார். இந்தத் திருமண நிகழ்ச்சியில், அரசியல் பிரபலங்கள், பாலிவுட் திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img