புதுதில்லி:
தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே- 17ல் அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழ்நிலை உள்ளதாகவும், அதன் பிறகு அரபிக் கடல் கேரளா பகுதியை 2 வாரத்தில் சென்றடைந்து மழை தீவிரம் அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய பாசன அணையான மேட்டூர் அணைக்கு தென் மேற்கு பருவ மழையின் போதுதான் நீர் வரத்து அதிகம் இருக்கும். கர்நாடகா, கேரளாவில் மழை தீவிரம் அடைந்தால் அணை நிரம்பி விடும். இல்லையெனில் வட கிழக்கு பருவ மழையைத்தான் நம்பி இருக்க வேண்டும்.
இந்நிலையில் வானிலை மைய தகவல்கள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது