காஷ்மீரில் துப்பாக்கி சூடு: காவலர் பலி; 2 பேர் காயம்

Published:

காஷ்மீரில் வடக்குப் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் பலியானார், பொதுமக்களில் ஒருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “பாரமுல்லா மாவட்டம் டங்மார்க் பகுதியில் உள்ள குன்சர் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து குன்சர் கிராமத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு வீட்டினுள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் காவலர் ஒருவர் பலியானார். பொதுமக்களில் ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்தனர். அங்கே பயங்கரவாதிகள் இருவர் பதுங்கியிருக்கலாம் என்று தெரிகிறது… என்றார் அவர்.

Related articles

Recent articles

spot_img