கொள்கை மாறாத சாத்வி பிரக்யா! பாஜக., அளித்த பரிசு – பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கம்!

sadhvi pragya - 2026

கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக, பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டது.

பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா இதனை அறிவித்துள்ளார். மேலும், கோட்சே குறித்த பிரக்யா தாக்குரின் சர்ச்சைப் பேச்சுக்கு ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று மக்களவையில் கோட்சே ஒரு தேச பக்தர் என சாத்வி பிரக்யா தாக்குர் பேசியது பெரும் சர்ச்சை யாக உருவெடுத்தது.

இதனிடையே, மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்றே பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் கருதுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் விமர்சனம் செய்தார்.

சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்திருத்தம் குறித்த விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு நாதுராம் கோட்சே தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, காந்தி ஒருதலைப்பட்சமான கொள்கையை கொண்டவர் என்பதால் 32 ஆண்டுகளாக அவர் மீது வஞ்சம் கொண்டிருந்ததாகவும், அதனால் காந்தியை கொலை செய்ததாகவும் கோட்சே தெரிவித்தார் என்றார் ஆ.ராசா!

அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாஜக எம்பி பிரக்யா தாக்குர், இந்த விவகாரத்தில் ஒரு தேசபக்தரை குறிப்பிட்டுப் பேச வேண்டாம் எனத் தெரிவித்தார்.

பிரக்யாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரக்யாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா சமாதானம் செய்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான் பிரக்யா தாகூர் கூறியுள்ளார்! இதை அவர்கள் மறைக்க முடியாது! பிரக்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

இந்நிலையில், தம் கொள்கையில் உறுதியாக இருந்து, ஒரு தேசபக்தரை பிரிவினைவாதிகளின் ஊதுகுழலாக செயல்படும் திமுக.,வின் ஆண்டிமுத்து ராசா இழிவாகப் பேசியபோது, இயல்பாக எழுந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் மறுத்துப் பேசிய பிரக்யா தாக்குரை பாதுகாப்புக் குழுவில் இருந்து நீக்கம்செய்து பாஜக., நிலை தடுமாறியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதில் இருந்து, பாஜக., முஸ்லிம்களை தாஜா செய்யும் கொள்கைகளுடன் இன்னொரு காங்கிரஸ் ஆகிவிட்டதாகவும் ஹிந்துக்களின் நலன் கருதி எதையும் செய்யவில்லை என்றும் தங்கள் உள்ளக் குமுறலை ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு மேலும் தூபம் போடுவது போல், பிரக்யா தாக்குர் விவகாரத்தில் பாஜக., தேசியத் தலைவர் ஜேபி நட்டா எடுத்துள்ள இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

இதனிடையே, உதம் சிங் குறித்து பேசியதை கோட்சேக்கு ஆதரவாக பேசினார் என திரிக்கப்படுகிறதா? என்று பாஜக.,வினர் சிலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்றால், ஏன் ஜே.பி.நட்டா இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப் படுகிறது.

amitsha - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories