December 6, 2025, 5:44 AM
24.9 C
Chennai

சிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை!

kesarikutta1 - 2025

சிவராத்திரியன்று கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வர சுவாமியை தரிசித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தெலங்காணா மாநில மக்கள் சிவராத்திரியை மிகச்சிறப்பாக, மிகமிக வைபவமாக கொண்டாடுவது வழக்கம் . வீடுகளை முதல் நாளே சுத்தம் செய்வார்கள். உபயோகித்த பாத்திரங்கள், புழங்காமல் உள்ளே இருக்கும் பாத்திரங்கள்… எல்லாவற்றையும் தேய்த்துக் கழுவி அடுக்குவார்கள்.

துணிமணிகள், போர்வைகள் என்று ஒன்றுவிடாமல் துவைத்து உலர்த்தி எடுத்து வைப்பார்கள். ஒட்டடை இன்றி வீட்டை பளிச்சென்று துப்புரவாக்குவார்கள். அதன்பின் சிவராத்திரி அன்று உபவாசமிருந்து உண்பதற்காக பழங்களும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு களும் வாங்கி வருவார்கள்.

சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விளக்கேற்றி வீட்டை அலங்கரித்து சிவ பூஜை செய்வார்கள். கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களில் பங்கு பெறுவார்கள். இரவு முழுவதும் கண்விழித்து சிவ வழிபாட்டில்… பெரும்பாலும் அருகாமையில் உள்ள சிவன் கோயில்களில் பஜனையில் ஈடுபடுவார்கள்.

அப்படிப்பட்ட தெலங்காணாவில் உள்ள கீசரிகுட்டா என்ற மலைக் கோயில் மிகப் பிரபலமான சிவாலயம். கீசரிகுட்டாவில் சிவராத்திரியன்று சுற்றுப்புறம் உள்ள அத்தனை கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் தரிசனத்திற்கு வருவார்கள். இதனை ஒரு புனித யாத்திரையாகவே கருதுவார்கள். அந்தக் கூட்டத்திலும் சிவநாமத்தில் தம்மை மறப்பார்கள்.

kesarikutta2 - 2025

ஆளுநர் தமிழிசை கீசரிகுட்டாவிற்கு சிவ தரிசனத்திற்கு வந்து சிவராத்திரியன்று இறை வழிபாடு செய்தார் .தம்பதி சமேதராக வந்திருந்தார். அர்ச்சகர்கள் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெலங்காணா மாநில மக்களின் நலனுக்காக தான் பிரார்தித்ததாகக் கூறினார். கூட்டம் அதிகம் இருந்த போதிலும் பக்தர்களுக்கு வசதிகள் சௌகர்யமாக இருந்தன என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories