சிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை!

Published:

kesarikutta1 - 2026

சிவராத்திரியன்று கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வர சுவாமியை தரிசித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தெலங்காணா மாநில மக்கள் சிவராத்திரியை மிகச்சிறப்பாக, மிகமிக வைபவமாக கொண்டாடுவது வழக்கம் . வீடுகளை முதல் நாளே சுத்தம் செய்வார்கள். உபயோகித்த பாத்திரங்கள், புழங்காமல் உள்ளே இருக்கும் பாத்திரங்கள்… எல்லாவற்றையும் தேய்த்துக் கழுவி அடுக்குவார்கள்.

துணிமணிகள், போர்வைகள் என்று ஒன்றுவிடாமல் துவைத்து உலர்த்தி எடுத்து வைப்பார்கள். ஒட்டடை இன்றி வீட்டை பளிச்சென்று துப்புரவாக்குவார்கள். அதன்பின் சிவராத்திரி அன்று உபவாசமிருந்து உண்பதற்காக பழங்களும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு களும் வாங்கி வருவார்கள்.

சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விளக்கேற்றி வீட்டை அலங்கரித்து சிவ பூஜை செய்வார்கள். கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களில் பங்கு பெறுவார்கள். இரவு முழுவதும் கண்விழித்து சிவ வழிபாட்டில்… பெரும்பாலும் அருகாமையில் உள்ள சிவன் கோயில்களில் பஜனையில் ஈடுபடுவார்கள்.

அப்படிப்பட்ட தெலங்காணாவில் உள்ள கீசரிகுட்டா என்ற மலைக் கோயில் மிகப் பிரபலமான சிவாலயம். கீசரிகுட்டாவில் சிவராத்திரியன்று சுற்றுப்புறம் உள்ள அத்தனை கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் தரிசனத்திற்கு வருவார்கள். இதனை ஒரு புனித யாத்திரையாகவே கருதுவார்கள். அந்தக் கூட்டத்திலும் சிவநாமத்தில் தம்மை மறப்பார்கள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
kesarikutta2 - 2026

ஆளுநர் தமிழிசை கீசரிகுட்டாவிற்கு சிவ தரிசனத்திற்கு வந்து சிவராத்திரியன்று இறை வழிபாடு செய்தார் .தம்பதி சமேதராக வந்திருந்தார். அர்ச்சகர்கள் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெலங்காணா மாநில மக்களின் நலனுக்காக தான் பிரார்தித்ததாகக் கூறினார். கூட்டம் அதிகம் இருந்த போதிலும் பக்தர்களுக்கு வசதிகள் சௌகர்யமாக இருந்தன என்றார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img