10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் எப்போது?

புது தில்லி: புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு இது குறித்து தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக., தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், மேற்கு வங்கம், கேரளம், சத்தீஸ்கர், கோவா, ராஜஸ்தான், ஹரியாணா, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்களை நியமித்தது. அண்மையில் மிஸோரம் ஆளுநர் அஜீஸ் குரோஷியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், மேகாலயம், மிஸோரம், மணிப்பூர், பீகார், திரிபுரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய 9 மாநிலங்களில் ஆளுநர் பதவிகள் காலியாக உள்ளன. இதைத் தவிர யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிகளுக்குத் தனியாக எவரும் நியமிக்கப்படாததால் வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் சிலர் அங்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, பீகார், மேகாலயம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். நாகாலாந்து ஆளுநர் பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா, அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநர்களும் சில மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 9 மாநிலங்களுக்கு ஆளுநர்களையும், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநரையும் மத்திய அரசு அறிவிக்கும் நாளை அரசியல் வட்டாரத்தில் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories