பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: மோடி, அத்வானி ஒரே மேடையில்

modi-advani-amithshaபெங்களூரு: பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் மசோதாவினால் அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தக் கூட்டம் தொடங்கும் முன்னதாக, எதிர்க்கட்சிகள் செய்துவரும் மோசமான பிரசாரத்தை முறியடிக்க, இது குறித்த பிரசாரத்தை பெரிய அளவில் மேற்கொள்ளப் போவதாகக் கூறியது பாஜக. மேலும், இந்த மசோதாவில் விவசாயிகள் விரும்பும் திருத்தத்தை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், அதற்காக விவசாயிகளுடன் பேச அரசு அழைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாஜக பொதுச் செயலர் பி.முரளிதர் ராவ், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டில், நேற்றைய வதந்திகளை முறியடிக்கும் விதமாக எல்.கே.அத்வானி கலந்துகொண்டுள்ளார். மேலும், அவர் இன்று காலை, பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் 111 தேசிய செயற்குழு உறுபினர்களும் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஜனவரியில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகையை ஒட்டி, மோடி தன்னை அரசு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டதால், அந்தக் கூட்டம் ஒத்திப் போடப்பட்டு, இப்போது நடைபெறுகிறது. மேலும், தில்லி தேர்தலில் பாஜக அடி வாங்கிய பிறகு நடக்கும் கூட்டமும் இதுவே. எதிர்க்கட்சிகள் அதிகம் விமர்சனங்களை எழுப்பி, மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான் பிரசாரங்கள் பலமாகியுள்ள நிலையில் கூட்டப்பட்டுள்ள கூட்டமும் இதுவே. எனவே இந்த இரு நாட்கள் கூட்டத்தில், பாஜகவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அலசப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories