கொரோனா: தப்பி ஓட பார்த்த அமெரிக்க தம்பதி! 5 நாட்களுக்கு பின் விமான நிலையத்தில் சிக்கினர்!

coronovirus - 2026

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் போலீஸிடமிருந்து தப்பிய அமெரிக்கத் தம்பதி கொச்சி விமானநிலையத்தில் நேற்று சிக்கினர்.

இதையடுத்து, அமெரிக்கத் தம்பதி இருவருக்கும் கொச்சி கலமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் அதிகமாக இருந்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கேரள அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் கண்காணிப்புக்குள் கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த தம்பதிக்குக் காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த இருவரையும் காவல்துறை தடுத்து நிறுத்தி வைத்திருந்த நிலையில் இருவரும் தப்பிச் சென்றனர். ஏறக்குறைய 5 நாட்களுக்குப்பின் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ” கடந்த 9-ம் தேதி அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதி கேரளாவுக்கு சுற்றுலா வந்தார்கள். இவர்கள் லண்டனிலிருந்து தோஹா சென்று, அங்கிருந்து கொச்சி வந்தார்கள்.

தோஹாவிலிருந்து வந்தார்கள் என்பதால், அவர்களைப் பரிசோதித்த போது கரோனா அறிகுறி இருந்ததால், அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்குள் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.

corono 1 - 2026

ஆனால், போலீஸாரை ஏமாற்றிவிட்டுத் தப்பிய அந்த தம்பதி கொச்சியில் கதக்களி ஆட்டம் பார்த்துவிட்டு, அங்கிருந்து ஆழப்புழாவுக்கு சென்றனர். ஆழப்புழாவில் படகுவீட்டில் சவாரி செய்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர். அங்கிருந்து திருவனந்தபுரம் அருகே இருக்கும் வர்க்கலாவுக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலப்புழாவுக்குச் செல்ல தம்பதி முடிவு செய்தார்கள்.

அப்போது தம்பதி இருவருக்கும் லேசான காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. இதையடுத்து கொச்சிக்கு விமானத்தில் செல்ல விமானநிலையத்துக்கு வந்தபோது அங்குள்ள காவல்துறையிடம் அமெரிக்கத் தம்பதி சிக்கினர். அவர்கள் இருவரையும் காவல்துறை கலமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தினர்.

தற்போது இருவரும் தனித் தனி அறையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்

corono 5 - 2026

திருவனந்தபுரம் மாவட்டஆட்சியர் கே. கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ” அமெரிக்கத் தம்பதி இருவரும் கேரளாவுக்கு வந்தபின் இவர்களைக் கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருந்தது. இவர்கள் இருவரும் வர்க்கலாவில் உள்ள கடற்கரை விடுதியில் தங்கி இருந்தார்கள்.

இந்த இருவரும் எங்கெல்லாம் சென்றிருப்பார்கள் என்று வழித்தடம் அமைத்துத் தேடி இறுதியாகக் கண்டுபிடித்தோம். இருவருக்கும் கரோனா இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இவர்கள் கடந்த 15 நாட்களாக யாரையெல்லாம் பார்த்தார்கள், பேசினார்கள், எங்குப் பழங்கள், உணவுகள் சாப்பிட்டார்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவர்களையும் பரிசோதிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Entertainment News

Popular Categories