கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கல்லுாரி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ‘ஆன் லைன்’ மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்களிடையே, அதிகரிக்கும் நோக்கில் ‘ஏம்பிசாப்ட்’ நிறுவனம் இ-பாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தில் நாடு முழுவதும், 250 கல்லுாரி, பல்கலைகள் உள்ளன.’ஏம்பிசாப்ட்’ நிறுவன அதிகாரிகள் கூறுகையில், காலை, 9.00 முதல், 11.00 மணிவரை 2 மணி நேரம் பேராசிரியர்கள் இந்த இ-பாக்ஸ் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுப்பார்கள்.
அதன்பின், இ-பாக்ஸ் திட்ட செய்முறைகளை மாணவர்கள், 5 மணி நேரம் பயன்படுத்துகின்றனர். தினமும், 7 மணி நேரம் மாணவர்கள் கல்வியை கற்க முடிகிறது. தற்போது 3 வது வாரம் துவங்க உள்ள நிலையில், 80 சதவீத மாணவர்கள் இணைந்து பயன்பெற்று வருகின்றனர் என்றனர்.
கொரோனா காரணமாக, ‘ஏம்பிசாப்ட்’ நிறுவனம் இ-பாக்ஸ் திட்டத்தை இலவசமாக வழங்க வேண்டும் என, மத்திய மனித வளமேம்பாட்டு துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவுறுத்தியது.
16 நாட்களுக்கும் மேலாக இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி டுவிட்டரில் பின் தொடர்ந்து லைக் செய்துள்ளார்.