December 6, 2025, 7:34 PM
26.8 C
Chennai

கர்ப்பிணி மகளைப் பார்க்கும் ஆசையில் காவேரியில் குதித்த தந்தை! சடலமாக மீட்பு!

kaveri
kaveri

மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மகளைப் பார்க்க காவிரி ஆற்றில் நீந்தி வந்த தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். பழ வியாபாரியான இவர், தனது மகள் சுமதிக்கும், கர்நாடக மாநிலம் கோபிநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

கர்ப்பிணியான சுமதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மகளைப் பார்ப்பதற்காக பெருமாளும், மணிகண்டன் தந்தை வெங்கடாஜலம் ஆகிய இருவரும் இருச்சக்கர வாகனத்தில் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆனால் கர்நாடக எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.

பின்னர் 2 பேரும் காவிரி ஆற்றில் நீந்தி மேட்டூர் வர முடிவு செய்தனர். நேற்று முன்தினம் அவர்கள் காவிரி ஆற்றில் குதித்து நீந்த தொடங்கினார்கள். ஒருமணி நேரத்திற்கு பிறகு வெங்கடாஜலம் எல்லையை கடந்து பாலாறு அருகே கரையேறி விட்டார். ஆனால் பெருமாள் வந்து சேரவில்லை.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, தீயணைப்புத் துறை வீரர்கள் காவிரி ஆற்றில் குதித்து பெருமாளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று பெருமாள் பிணமாக மீட்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனப்பகுதி அருகே மீட்கப்பட்டதால், அருகில் உள்ள பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மகளை பார்க்க ஆற்றில் குதித்து உயிரை விட்ட தந்தையின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories