பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கேட்டு மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்தன. மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிபிஐ விசாரிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டு கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த வழக்கை 3 மாத காலக் கெடுவுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது கர்நாடக மாநில அரசு. ஆனால், சிபிஐக்கு எந்த மாநில அரசும் இவ்வாறு காலக்கெடுவெல்லாம் விதிக்கமுடியாது என்று சிபிஐ, ஒரு கடிதம் அனுப்பியது. அதில், இவ்வாறு காலக் கெடு விதித்தால் தங்களால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும், இந்த வழக்கை விசாரிக்கப் போவதில்லை என்றும் கூறி மறுப்பு தெரிவித்தது. தங்கள் தவறை தாமதமாக உணர்ந்த கர்நாடக அரசு, இப்போது காலக்கெடு இல்லாமல், வழக்கமான பரிந்துரையாக ஒரு அறிவிப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த ஒரு சிறிய விஷயம் கூடத் தெரியாமல் கர்நாடக மாநில அரசு சிபிஐக்கு கடிதம் அனுப்பியிருக்குமா, அப்படியென்றால் கர்நாடக அரசில் யாரோ வேண்டுமென்றே இத்தகைய தவறை உள்நோக்கத்துடன் செய்திருப்பாரோ என்ற பரபரப்புப் பேச்சும் அங்கே இல்லாமலில்லை!
Hot this week
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
Entertainment News
Next article

