கணவன் உடலை தள்ளு வண்டியில் எடுத்து சென்ற மனைவி! கொரோனா பீதியில் உதவிக்கு வராத மக்கள்.. கர்நாடகா அவலம்!

karnataka

கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக யாரும் உதவாததால் இறந்த கணவரின் உடலை அவரது மனைவி தள்ளுவண்டியில் இடுகாட்டுக்கு தள்ளி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள அதானியை சேர்ந்தவர் சாதஷிவ் ஹிரட்டி (55). செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர் கடந்த 17-ம் தேதி இரவு தனது மனைவி, மகன்கள் இருவருடன் சிக்காட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனி அறையில் தூங்கிய‌ சதாஷிவ் ஹிரட்டி மறுநாள் காலை வரை எழுந்திருக்கவில்லை. பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், அண்டை வீட்டார் உதவியுடன் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது சதாஷிவ் ஹிரட்டி இறந்து கிடந்ததை தொடர்ந்து அவரை அதானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்த போது, அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது.

ஆனால் அதானியில் சதாஷிவ் ஹிரட்டி கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்ததாக வதந்தி பரவியது.

இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் யாரும் சதாஷிவ் ஹிரட்டியின் உடலை காண வரவில்லை. மனைவி அக்கம்மா, உறவினர்கள் பலரை அழைத்தும் உதவிக்கு யாரும் வரவில்லை.

அதேபோல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் கொரோனா பீதியின் காரணமாக சதாஷிவ் ஹிரட்டியின் உடலை ஏற்ற ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்மா சதாஷிவ் ஹிரட்டியின் உடலை வெள்ளை சாக்கில் வைத்து கட்டி, தள்ளுவண்டியில் வைத்து சுமார் 2 கி.மீ. தூரமுள்ள இடுகாட்டுக்கு தள்ளிச் சென்றார்.

அவரோடு அவரது மகன்கள் இருவர் மட்டுமே வண்டியை தள்ளிச் சென்றுள்ளனர். இடுகாட்டில் உறவினர்கள் யாருடைய உதவியும் இன்றி, மூவருமே இறுதிச் சடங்கை நிறைவேற்றினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் பெலகாவி மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநகர ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories