December 7, 2025, 1:07 AM
25.6 C
Chennai

கணவன் உடலை தள்ளு வண்டியில் எடுத்து சென்ற மனைவி! கொரோனா பீதியில் உதவிக்கு வராத மக்கள்.. கர்நாடகா அவலம்!

karnataka

கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக யாரும் உதவாததால் இறந்த கணவரின் உடலை அவரது மனைவி தள்ளுவண்டியில் இடுகாட்டுக்கு தள்ளி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள அதானியை சேர்ந்தவர் சாதஷிவ் ஹிரட்டி (55). செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர் கடந்த 17-ம் தேதி இரவு தனது மனைவி, மகன்கள் இருவருடன் சிக்காட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனி அறையில் தூங்கிய‌ சதாஷிவ் ஹிரட்டி மறுநாள் காலை வரை எழுந்திருக்கவில்லை. பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், அண்டை வீட்டார் உதவியுடன் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது சதாஷிவ் ஹிரட்டி இறந்து கிடந்ததை தொடர்ந்து அவரை அதானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்த போது, அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது.

ஆனால் அதானியில் சதாஷிவ் ஹிரட்டி கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்ததாக வதந்தி பரவியது.

இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் யாரும் சதாஷிவ் ஹிரட்டியின் உடலை காண வரவில்லை. மனைவி அக்கம்மா, உறவினர்கள் பலரை அழைத்தும் உதவிக்கு யாரும் வரவில்லை.

அதேபோல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் கொரோனா பீதியின் காரணமாக சதாஷிவ் ஹிரட்டியின் உடலை ஏற்ற ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்மா சதாஷிவ் ஹிரட்டியின் உடலை வெள்ளை சாக்கில் வைத்து கட்டி, தள்ளுவண்டியில் வைத்து சுமார் 2 கி.மீ. தூரமுள்ள இடுகாட்டுக்கு தள்ளிச் சென்றார்.

அவரோடு அவரது மகன்கள் இருவர் மட்டுமே வண்டியை தள்ளிச் சென்றுள்ளனர். இடுகாட்டில் உறவினர்கள் யாருடைய உதவியும் இன்றி, மூவருமே இறுதிச் சடங்கை நிறைவேற்றினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் பெலகாவி மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநகர ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories