இளைஞர் ஒருவர் குறித்து அவதூறான செய்தியை வாட்ஸ் அப்பில் உலவவிட்ட பெண்ணுக்கு சவுதியில் 70 சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், ‘வாட்ஸ் அப்’பில் இளைஞர் ஒருவர் குறித்து அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப கருவிகள் மூலம் அடுத்தவர்களை அவமதிப்பதும் துன்புறுத்துவதும் குற்றம் என்பதால்,அந்தப் பெண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு ரூ.3,28,000 அபராதம் விதித்தது. அதற்கு அந்த இளைஞர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்தப் பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், கடுமையாக தண்டிக்க வேண்டும் எனக் கோரினார். இதை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இளைஞர் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு: பெண்ணுக்கு 70 சவுக்கடி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

