பக்தி சேனலாம்… ஆனா ராமஜன்ம பூமி நிகழ்வு நேரலை இல்லையாம்! சர்ச்சையில் திருப்பதி தேவஸ்தானம்!

Published:

svbc-channel
svbc-channel
  • அயோத்தி பூமி பூஜையில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை அலட்சியம் ஏன்?
  • திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மீது ஆந்திரா பிஜேபி தலைவர்கள் தீவிரமான ஆத்திரம்.

250 டிவி சேனல்கள் அயோத்தி ராமாலயம் பூமி பூஜையின் நேரலையை மணிக்கணக்காக காண்பித்தபோது திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்விபிசி சேனல் எதனால் டெலிகாஸ்ட் செய்யவில்லை என்று ஆந்திர மாநில பிஜேபி துணைத்தலைவர் எஸ் விஷ்ணுவர்தன் ரெட்டி ஆத்திரமடைந்தார்.

பூமி பூஜையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேரலை டெலிகாஸ்ட் செய்யாதது ஏன் என்று பிஜேபி மாநில உப தலைவர் எஸ் விஷ்ணுவர்தன் ரெட்டி வினா எழுப்பினார்.

அயோத்தியா காட்சிகளை திருமலா பக்தி சேனல் எதனால் ஒளிபரப்புவது இல்லை என்று கேட்டார். 250 டிவி சேனல்கள் அயோத்தி ராமாலயம் பூமி பூஜையை நேரலையாக காட்டிக் கொண்டிருந்தபோது திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஏன் மறைந்தது என்று கேள்வி எழுப்பினார்.

விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் சாரதா பீடம் சென்றபோது நேரலையாக ஒளிபரப்பிய திருமலை திருப்பதி தேவஸ்தானம் அயோத்தியா காட்சிகளை எதனால் மறைத்துள்ளது என்று எரிந்து விழுந்தார். 24 மணி நேரத்திற்குள் இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் ஜெகன், அறநிலையத்துறை அமைச்சர் பெல்லம்பள்ளி ஸ்ரீனிவாஸ், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் சுப்பாரெட்டி உடனடியாக இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று மாநில பிஜேபி டிமாண்டு செய்வதாக விஷ்ணுவர்தன் ரெட்டி குறிப்பிட்டார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img