வட இந்தியாவில் பல அப்பாவி சிறுமிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடு படுத்தி வந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டர்.
வட இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களை வைத்து விபசாரம் செய்து கொடிகட்டி பறந்து வந்தவர் சோனு பஞ்சாபன். கடந்த 2017 ஆண்டு 12 வயதே ஆன சிறுமியை கடத்தி கொடுமை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
அந்த சிறுமிக்கு விபச்சாரத்திற்கு செல்லும் முன் பல முறை போதை மாத்திரைகளை கொடுத்து விபச்சாரத்திற்கு செல்ல உணர்வுகளை மாற்றியுள்ளனர். இதனால் விபச்சாரத்திற்கு வரும் நபர்களுக்கு முழு திருப்தி கிடைக்கும். அதிக பணம் கொடுத்து மறுபடியும் சிறுமியை கேட்டு வருவார்.
இப்படி சித்திரவதை அனுபவித்த சிறுமி அங்கிருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சோனு பஞ்சாபனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அந்த தண்டனையை ஏற்காத சோனு மேல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.