நனவான மக்கள் கனவு! வியக்க வைக்கும் கனகதுர்கா பாலம்! ஒரு பருந்துப் பார்வை!

Published:

kanakadurga-bridge
kanakadurga-bridge

அருமை அருமை என்று வியக்க வைக்கும் கனகதுர்கா பாலத்தின் ட்ரோன் பார்வை.

விஜயவாடா நகரவாசிகளின் பலநாள் கனவான கனகதுர்கா பாலம் செப்டம்பர் 4 ம் தேதி தொடங்கப் படுவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கரங்களால் செப்டம்பர் 4 ம் தேதி மாநிலத்தில் ரூ ஆறாயிரம் கோடி மதிப்புள்ள முன்னேற்ற பிராஜெக்ட்கள் தொடக்க விழா மற்றும் ரூ 5,700 கோடி மதிப்புள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா செய்ய இருப்பதாக செய்தி.

அதுமட்டுமின்றி இந்த கனகதுர்கா பாலத்தை அதேநாளில் மத்திய அமைச்சர் நாட்டிற்கு உடமை ஆக்குகிறார் . இந்தப் பின்னணியில் எடுத்த பாலத்தின் ட்ரோன் வீடியோ அனைவரையும் கவரும் விதமாக உள்ளது.

இந்திரகீலாத்ரி மலையை ஒட்டி கிருஷ்ணா நதியின் மடியில் அமைத்திருப்பதாக தோற்றமளிக்கும் இந்த பாலம் அருமை அருமை என்று அனைவராலும் வர்ணிக்கப்படுகிறது.

ஒருபுறம் துர்கம்மா…. மறுபுறம் கிருஷ்ணம்மா… இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த பாலம் சிறப்பாக அனைவரையும் ஈர்த்து வருகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இது தொடர்பான ட்ரோன் வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img