கண்ணாமூச்சி விளையாட 8 வயது சிறுமியை அழைத்து.. 7 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Published:

vankodumai

திரிபுராவில் 8 வயது சிறுமியை ஏழு சிறுவர்கள் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு திரிபுரா மாவட்டத்தில் தபாரியாவில் வசிக்கும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

அவர்களில் நான்கு பேர் சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சுமார் 12 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

“பாதிக்கப்பட்டவரின் தந்தை அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியை கண்ணாமூச்சி விளையாட அழைத்துள்ளார்கள் எனத் தெரிகிறது.

பின்னர் அவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது” என்று போலீஸ் அதிகாரி பிரியா மாதுரி மஜும்தர் கூறினார்.

3’ஆம் வகுப்பு பயிலும் பாதிக்கப்பட்ட மாணவி வீடு திரும்பியதும், நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

சிறுமிக்கு தெரிந்த குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் சனிக்கிழமை புகார் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டனர்.

“எஃப்.ஐ.ஆரில் மொத்தம் ஏழு பேர் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம், ஒருவர் தலைமறைவாக உள்ளார்” என்று மஜும்தர் மேலும் கூறினார்

Related articles

Recent articles

spot_img