February 21, 2026, 5:18 PM
29 C
Chennai

வங்கியில் பெண் ஊழியர் கழுத்தில் கத்தி வைத்து பணம் கேட்ட நபர்!

bank

நாசிக்கில் 30 வயதைத் தாண்டிய ஒரு நபர் வங்கிக்குள் நுழைந்து பெண் அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். வங்கி அதிகாரிகள் அவரைத் தடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் மதியம் 1.30 மணியளவில் எம்.ஜி ரோட்டில் அமைந்துள்ள ஐடிபிஐ வங்கியில் நடந்துள்ளது. அந்த நபரின் பெயர் அமர் போட்கே எனவும், அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் எனவும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

சர்கார்வாடா காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஹேமந்த் சோம்வான்ஷி இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார். அந்த நபர் கையில் கத்தியுடன் வங்கிக்குள் நுழைந்து ஒரு பெண் அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.

வங்கி அதிகாரிகள் அவரிடம் பேசி பெண்ணின் கழுத்திலிருந்து கத்தியை எடுக்கவைத்து, பின்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்த நபர் பார்வை குறைபாடு உள்ளவர் என்றும், அதனால் அவர் உயிர்வாழ 10 லட்சம் ரூபாய் தேவை என்றும் கேட்டு மிரட்டியதாக ஒத்துக் கொண்டுள்ளார்.

இதுபற்றி ஐடிபிஐ வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில், ”நாசிக்கில் உள்ள ஐடிபிஐ வங்கிக்கிளையில் ஒரு அதிகாரியை கத்திவை வைத்து ஒரு மனிதன் மிரட்டியுள்ளான். அலுவலக அதிகாரி மற்றும் பணியாளர்களின் சாதுர்யத்தால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஐடிபிஐ தனது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் அக்கறைகொள்ளும்” என பதிவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories