December 5, 2025, 4:14 PM
27.9 C
Chennai

வங்கியில் பெண் ஊழியர் கழுத்தில் கத்தி வைத்து பணம் கேட்ட நபர்!

bank

நாசிக்கில் 30 வயதைத் தாண்டிய ஒரு நபர் வங்கிக்குள் நுழைந்து பெண் அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். வங்கி அதிகாரிகள் அவரைத் தடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் மதியம் 1.30 மணியளவில் எம்.ஜி ரோட்டில் அமைந்துள்ள ஐடிபிஐ வங்கியில் நடந்துள்ளது. அந்த நபரின் பெயர் அமர் போட்கே எனவும், அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் எனவும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

சர்கார்வாடா காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஹேமந்த் சோம்வான்ஷி இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார். அந்த நபர் கையில் கத்தியுடன் வங்கிக்குள் நுழைந்து ஒரு பெண் அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.

வங்கி அதிகாரிகள் அவரிடம் பேசி பெண்ணின் கழுத்திலிருந்து கத்தியை எடுக்கவைத்து, பின்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்த நபர் பார்வை குறைபாடு உள்ளவர் என்றும், அதனால் அவர் உயிர்வாழ 10 லட்சம் ரூபாய் தேவை என்றும் கேட்டு மிரட்டியதாக ஒத்துக் கொண்டுள்ளார்.

இதுபற்றி ஐடிபிஐ வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில், ”நாசிக்கில் உள்ள ஐடிபிஐ வங்கிக்கிளையில் ஒரு அதிகாரியை கத்திவை வைத்து ஒரு மனிதன் மிரட்டியுள்ளான். அலுவலக அதிகாரி மற்றும் பணியாளர்களின் சாதுர்யத்தால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஐடிபிஐ தனது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் அக்கறைகொள்ளும்” என பதிவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories