உலக ஊழல் ஒழிப்பு தினத்தில்… ஒரு சிந்தனை!

anti-corruption-day
anti-corruption-day

போதுமென்ற மனம்
கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.

“ஒருவனின் திருப்தியான மனமே ஒருவனுக்கு உலகில் கிடைக்கும் உயர்ந்த வரம்” – என்ற என்றோ நான் வாசித்த வரிகளை இன்று என் மனம் அசைப்போட்டது. உலக ஊழல் ஒழிப்பு தினம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அனுசரிக்கப்படுகிறது. திருப்தியான மனதுடன் அனைவரும் இருந்தால் இந்த நாள் அனுசரிக்க வேண்டிய கட்டாயமே ஏற்பட்டு இருக்காது என்பதே நிதர்சமான உண்மை.

“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பது போல மனதினை அடக்கி நம்மிடம் இருப்பதே போதும் என்ற மனப்பாங்கை நமக்கு நாமே வளர்த்துக் கொள்வதே சால சிறந்தது. நேர்மையான முறையில் வரும் வருமானத்திலேயே திருப்தியடையும் மனத்திறனையும் வளர்த்துக் கொள்வதேயே நமது ஒழுக்கமாக கடைப்பிடித்தல் ஒன்றே இன்றைய சூழலில் முக்கியமாக கருதப்படுகிறது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சாகும் போது தேவைக்கு அதிகமான பொருளினால், பொருளாதார நிலையினால் நம் வாழ்விலும் மனக் கஷ்டமே உண்டாகும் என்பதே நிதர்சனமான உண்மை.

நாம் நம் வேலைகளுக்காக அரசுத் துறைகளில் உள்ளோர்களை அணுகும் போது அதற்கான ஆவணங்களை சரியாக எடுத்துச் சென்றோம் என்றாலே, நமக்கு மடியில் பயம் இல்லாத போது வழியில் பயமேன் என்பது போல நாமும் எதற்கும் அஞ்சாமல், லஞ்சம் தராமல் இருக்க முடியும் அல்லவா?

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

செய்ய வேண்டிய வேலைகளை முன் கூட்டியே செய்வதும், கடைசி நிமிட அவசரத்தையும் தவிர்ப்பதும், லஞ்சத்தை ஒழிக்கும் வழிகளில் சிலவாக உள்ளன.

சில சமயங்களில் வேண்டுமென்றே நம் காரியங்கள் லஞ்சப் பணத்திற்காக இழுத்தடிக்கப்படுகிறது என்றாலும், நம் கையில் தான் இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளதே. அதை உபயோகப்படுத்தி காலதாமதாமாக செய்யப்படும் நம் வேலைகளை பற்றியத் தகவல்களை அறியவும் முடியும்.

சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வந்த கீழ்வரும் செய்தியானது நமக்கு ஒரு படிப்பினையை அளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு சாஃவேர் நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர், அவர் நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கில் தீர்ப்பு கூறும் நாளும் வந்தது. நீதிமன்றம் வந்த நீதிபதி, அங்கு இருந்தவர்களிடம் அந்த நிறுவனருக்கு காலைச் சிற்றுண்டி தருமாறு கூறினார். தான் சில நிமிடங்களில் அங்கு வருவதாகவும் கூறிச் சென்றார், நீதிபதி.

சில நிமிடங்களில் மீண்டும் அங்கு வந்த நீதிபதிக்கோ ஆச்சரியம் காத்திருந்தது. அந்தக் குற்றவாளியான நிறுவனரோ அவர் தட்டில் வைத்ததை சாப்பிடாமலேயே இருந்தார். அதனால், நீதிபதி அவரிடம் வினவ, நிறுவனரோ உணவு தன் தொண்டையில் இறங்க வில்லை என்றார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

அப்போது நீதிபதியோ, அவரிடம், ” பாருங்கள், உங்கள் உடம்பே தேவையானதை விட அதிகமானதை எடுத்துக் கொள்ளாமல் மறுக்கிறது. இதையே உங்கள் மனமும் செய்திருந்தால் உங்களுக்கு இன்று இந்த நிலை வந்து இருக்காது,” என்றார். அதைக் கேட்ட நிறுவனரோ தாரைதாரையாக கண்ணீர் மல்க நின்றாராம். இதுதான் அந்தச் செய்தி.

நாமும் அதிகம் ஆசைப்படாமல் திருப்தியான மனதுடன் லஞ்சம் வாங்காமலும், லஞ்சம் கொடுக்காமலும் இருக்கவும், ஊழலை எதிர்த்துப் போராடவும் இந்தத் தருணத்தில் உறுதிக்கொள்வதே நம் கடமையாய் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories