புது தில்லி: வரும் மார்ச் 27 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பெறுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், வாஜ்பாய்க்கான பாரத ரத்னா விருது, நாளை மறுநாள் மார்ச் 27ம் தேதி வழங்கப்படுகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே, அவரது வீட்டுக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கவுள்ளார். அதேபோல், மதன்மோகன் மாளவியாவுக்கு வரும் மார்ச் 31 ல் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
மார்ச் 27ல் பாரத ரத்னா பெறுகிறார் வாஜ்பாய்
Popular Categories


