December 6, 2025, 2:40 AM
26 C
Chennai

டி20: கடைசிப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!

kohli2 - 2025

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியுடனான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

முதலில் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். அவருடன் இந்த முறை வித்தியாசமாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார் இதில் இரண்டு சிக்ஸர்களும் ஏழு பவுண்டரிகளும் அடங்கும்.

india batting - 2025

ரோகித் சர்மாவுக்கு பிறகு களத்தில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இறுதிக்கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹர்திக் பாண்டியா 2 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆர்வம் காட்டியது. எனினும் முதல் விக்கெட்டுக்கு ஜாசன் ராய் டக் அவுட் ஆனார்.

இந்நிலையில் ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மாலனும் அதிரடியாக ஆடினர். ஜோஸ் பட்லர் 52 ரன்களும் மாலன் 68 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது.

இதையடுத்து 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories