கங்கையைத் தூய்மைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்: முதல்வர்கள் பங்கேற்பு

Published:

ganga-river-project கங்கையைத் தூய்மைப் படுத்தும் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்கண்ட், உத்தர்கண்ட் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கங்கை நதி ஓடும் மாநிலங்களின் முதல்வர்களுடன் கங்கையைத் தூய்மைப் படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தர்காண்ட் முதல்வர் ஹரீஷ் ரவாத், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் ஆகியோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக தகவல் தெரிவிக்கவில்லை. கங்கா வடிநில வாரியம் சார்பாக நடைபெறும் 6-வது கூட்டம் இது. என்றாலும். இக்கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தலைமை வகித்தார். கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பீகார், ஜார்கண்ட், உத்தர்கண்ட் முதல்வர்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, உமா பாரதி, பீரேந்தர் சிங், ஸ்ரீப்ரகாஷ் ஜெய்ஸ்வால், பியூஸ் கோயல், சன்வர்லால் ஜட், நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img