கங்கையைத் தூய்மைப் படுத்தும் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்கண்ட், உத்தர்கண்ட் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கங்கை நதி ஓடும் மாநிலங்களின் முதல்வர்களுடன் கங்கையைத் தூய்மைப் படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தர்காண்ட் முதல்வர் ஹரீஷ் ரவாத், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் ஆகியோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக தகவல் தெரிவிக்கவில்லை. கங்கா வடிநில வாரியம் சார்பாக நடைபெறும் 6-வது கூட்டம் இது. என்றாலும். இக்கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தலைமை வகித்தார். கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பீகார், ஜார்கண்ட், உத்தர்கண்ட் முதல்வர்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, உமா பாரதி, பீரேந்தர் சிங், ஸ்ரீப்ரகாஷ் ஜெய்ஸ்வால், பியூஸ் கோயல், சன்வர்லால் ஜட், நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Chaired a meeting of National Ganga River Basin Authority, which was attended by Ministers, CMs & officials. https://t.co/5E3nJ7G0qa — Narendra Modi (@narendramodi) March 26, 2015


