ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: மத்திய அரசு!

vaccine - 2026

ஏப்ரல் 1-ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..

இந்தியா தற்போது கொரோனாவின் 2-வது அலையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 40,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் சுமார் 80% கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..

இதனிடையே தடுப்பூசி போடும் பணிகளும் இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.

முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வரும் 1-ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார், தகுதியுள்ள அனைவரையும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

prakash-javtekar
prakash-javtekar

நேற்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக கேடயம் செய்கிறார்கள், “என்று ஜவடேகர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories