இடமில்லை.. நடைப்பாதையில் சடலங்கள் எரிப்பு!

dead body - 2026

ஜார்க்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் நேற்று ஒரேநேரத்தில் 60க்கும் மேற்பட்ட சடலங்களை தகனம் செய்யும் சூழல் ஏற்பட்டதால், சடலங்களை சாலையில் வைத்து தகனம் செய்யும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

போதிய அளவில் தகனமேடைகள் இல்லாததால் திறந்த வெளியில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. 180க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் இந்த வைரசால் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவலநிலை தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ளது.

பல்வேறு நாடுகளில் இந்த வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் சில மாநிலங்களில் ஊரடங்கு மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சியில் ஒரே நேரத்தில் 60 சடலங்களை அடக்கம் செய்ய வேண்டிய சூழல் நேற்று ஏற்பட்டது. அதேபோல், அங்கு போதிய இடவசதி மற்றும் தகன மேடைகள் இல்லாததால் தானம் செய்ய உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

குறிப்பாக 60 உடல்களில் 35 சடலங்கள் எரிக்கப்பட்டன. 13 சடலங்கள் காந்த போலி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. 12 சடலங்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன.

அதில் அதிகமான சடலங்கள் தகன மேடையில் எரியூட்டுவதற்கு கொண்டு வரப்பட்டிருந்தன ஆனால் அங்கு உடல்களை தகனம் செய்ய போதிய இட வசதியோ அல்லது தகனமேடையோ இல்லாத காரணத்தினால் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் ஒரு கட்டத்தில் உறவினர்கள் திறந்த வெளியிலேயே எரி மேடைகளை உருவாக்கி சடலங்களை தகனம் செய்தனர்.

அதேபோல் வாகன நிறுத்தம் இடங்களிலும் சடலங்கள் எரியூட்டப்பட்டன. குறிப்பாக மின்சார தகன மேடை பழுதடைந்தே இது போன்ற மோசமான சுழலுக்கு காரணம் என மக்கள் புகார் கூறினர். இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மார்ச் மாதத்தில், 5 தகன மற்றும் 2 கல்லறைகளில் 347 இறந்த உடல்கள் தகனம் செய்யப்பட்டன, அதேபோல் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களில் 289 இறந்த உடல்கள் தகனம் செய்ய வந்தன என்பது குறிப்பிடதக்கது.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories