பங்குச் சந்தை சென்செக்ஸ் 30 ஆயிரம் கடந்து புதிய உச்சம்

Published:

mumbai-stock-exchangeபுது தில்லி : இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து 30,000 புள்ளிகளைக் கடந்தது. முன்னதாக, இன்று காலை மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்திருந்தது. இதன் காரணமாக பங்குச் சந்தையில் இந்த திடீர் உயர்வு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் சற்று நேரத்தில் சில புள்ளிகள் குறைந்து, 30 ஆயிரத்துக்கும் குறைந்தது சென்செக்ஸ். மேலும், ரிசர்வ் வங்கி அறிவிப்பால் சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img