February 22, 2026, 6:22 PM
29 C
Chennai

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

money 1
money 1

கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை, 1.5 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அளித்துள்ளது.

வேரியபல் டி.ஏ. அதாவது வேரியபல் அகவிலைப்படியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மாதத்திற்கு ரூ.105 முதல் ரூ.210 வரையிலான அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வரும். இது மத்திய துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தையும் அதிகரிக்கும்.

மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலைவாய்ப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் மத்திய அரசு, ரயில்வே நிர்வாகம், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், முக்கிய துறைமுகங்கள் மற்றும் மத்திய அரசால் நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் அரசாங்கம் கூறியது.

இந்த விகிதங்கள் ஒப்பந்த மற்றும் சாதாரண ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

வேரியபல் கொடுப்பனவின் விகிதங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தம் ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வரும் என தொழிலாளர் அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.

“தொழில்துறை பணியகத்தால் தொகுக்கப்பட்ட விலைக் குறியீடான தொழில்துறை தொழிலாளர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (CPI-IW) வேரியபல் அகவிலைப்படி (VDA) திருத்தப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் 2020 வரையிலான சராசரி CPI-IW சமீபத்திய VDA திருத்தத்தை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது ” என அமைச்சகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில், “இது நாடு முழுவதும் மத்திய துறையில் பல்வேறு திட்டமிடப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 1.50 கோடி தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். VDA-வின் இந்த உயர்வு இந்த தொழிலாளர்களுக்கு (Employees), குறிப்பாக தற்போதைய தொற்றுநோய் காலங்களில் ஆதரவாக இருக்கும்” என்றார்.

மத்திய துறையில் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை அமல்படுத்துவது, மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள தலைமை தொழிலாளர் ஆணையரின் (மத்திய) ஆய்வு அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories