கொரோனாவால் கணவனை இழந்த கபடி வீராங்கனை.. நிதி உதவியளித்த மத்திய அமைச்சகம்!

dejaswani bai
dejaswani bai

கொரோனா தொற்றால் கணவரை இழந்த , இந்திய கபடி வீராங்கனைக்கு நிதி உதவி வழங்குவதற்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2010 மற்றும் 2014 ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, இந்திய பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றிருந்தார் தேஜஸ்வினி பாய் .

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்வினி பாய், சிறந்த வீராங்கனைக்காக அர்ஜுனா விருதையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தேஜஸ்வினி பாய்க்கும் ,அவருடைய கணவர் நவீனுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தேஜஸ்வினி பாய் தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.

ஆனால் அவருடைய கணவர் சிகிச்சை பலனின்றி கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் கொரோனா தொற்றால் கணவரை பறிகொடுத்த வீராங்கனை தேஜஸ்வினி பாய்க்கு , உதவி செய்ய வேண்டும் என்று பல்வேறு விளையாட்டு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய நல நிதியின் மூலமாக ரூபாய் 2 லட்சம் தேஜஸ்வினி பாய்க்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றிய வீராங்கனை தேஜஸ்வினி பாய் கூறும்போது, இறந்த என்னுடைய கணவருக்கு 30 வயதுதான். ஆனால் அவருடைய தந்தை இறந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், மிகுந்த பயமும் மன அழுத்தத்துடன் காணப்பட்டதே அவருடைய உயிரை பறித்து விட்டது.

இந்நிலையில் விளையாட்டு அமைச்சகம் ,எனக்கு இந்த நிதி உதவியை வழங்க முடிவெடுத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றும், என்னைப் போல் பலரும் நிதி பிரச்சனையால் தவித்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கும் நிதி உதவி கிடைத்தால், நன்றாக இருக்கும். எனது 5 மாத பெண் குழந்தையை ,இந்த நிதி உதவியின் மூலம் அவருடைய வருங்கால தேவைக்கு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories