April 29, 2025, 12:38 AM
29.9 C
Chennai

ஜெபம் செய்தால் கொரோனா ஓடும்.. விழிப்புணர்வு களப்பணியில் நர்ஸ் மதப்பிரச்சாரம்!

nurse 1
nurse 1

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான களப் பணியின் போது செவிலியர் ஒருவர் கிறிஸ்தவ மதப்‌ பிரச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசம் ரட்லம் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் பஜாலா என்ற பகுதியில் களப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர் கிறித்தவ மத போதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி மதப் பிரச்சாரம் மேற்கொண்டது தெரிய வந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற செவிலியர் மதம் பிரச்சாரத்தில் ஈடுபட்டது உண்மை என்று காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். அவரிடம் இருந்து கிறிஸ்தவ மத போதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தியா திவாரி என்ற அந்த செவிலியர், அரசுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டே கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அங்கு சென்று பார்த்த போது அவர் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களுடன் கிறிஸ்தவ போதனைகள், ஜெபக் கூட்டங்கள், பாடல்கள் ஆகியவை அடங்கிய பிரசுரங்களையும் விநியோகித்து தெரிய வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

ALSO READ:  மதுரை கோயில்களில் தை பூசம்; சிறப்பு பூஜைகள்!

சமூக வலைதளங்களில் இது குறித்து பகிரப்பட்டு வரும் வீடியோவில் எதற்காக மதப் பிரச்சாரம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறீர்கள் என்று கேட்ட போது, தொடர்ந்து தான் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று அந்த செவிலியர் கூறுகிறார். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொள்கிறார்.

தான் எல்லாரிடமும் மதப் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், அது ‘தேவைப்படுபவர்களிடம்’ மட்டுமே செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களோ தங்களுக்கு இந்த மாதிரியான மத பிரச்சாரம் எதுவும் தேவையில்லை என்று கூறுகின்றனர்.

convert
convert

இதையடுத்து காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போதும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து வாதிட்டுள்ளார்.

ஆனால் அவர் “இயேசுவிடம் ஜெபித்தால் மக்கள் கொரோனா தொற்று ஏற்படுவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்” என்று மக்களிடையே கூறியது தெரிய வந்ததாலும், அதை நிரூபிக்கும் வகையில் மத போதனை அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ALSO READ:  நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories