December 6, 2025, 1:52 AM
26 C
Chennai

‘சுதர்மா’ சம்ஸ்க்ருத நாளிதழ் ஆசிரியர் சம்பத்குமார் காலமானார்!

sampathkumar sudharma - 2025
सुधर्मा ஸுதர்மா Sudharma ஸம்ஸ்க்ருத நாளிதழின் ஆசிரியர் ஸ்ரீமான் ஸம்பத் குமார் ஆசார்யன் திருவடி அடைந்தார்! ஓம் ஸாந்தி ஓம்!

உலகின் ஒரே சமஸ்கிருத நாளிதழான சுதர்மா பத்திரிகையின் ஆசிரியர் சம்பத்குமார் நேற்று மாரடைப்பால் காலமானார்.

கே.வி. சம்பத்குமார் இந்தியாவின் ஒரே சம்ஸ்கிருத நாளிதழான சுதர்மா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். கடந்த 31 வருடங்களாக இதை தொய்வின்றி நடத்தி வந்தார். இவர் புதன்கிழமை நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.

சுதர்மா இதழ் இவரது தந்தை கலாலே நடாதூர் வரதராஜ ஐயங்கார் என்பவரால் நிறுவப்பட்டது. மைசூரு நகரத்தைச் சேர்ந்த மிகப்பெரும் சம்ஸ்கிருத அறிஞரான இவர் 1970 ஜூலை 15-ஆம் நாள் இதனை நிறுவினார். 1990 ஆம் வருடம் அவரது மறைவுக்குப் பிறகு சம்பத்குமார் மற்றும் அவரது மனைவி விதூஷி கே எஸ் ஜெயலட்சுமி ஆகியோர் இந்த இதழை ஏற்று திறம்பட நடத்தி வந்தனர்.

சுதர்மா இதழுக்கு 3,500 அதிதீவிர வாசகர்கள் உலகம் முழுவதும் இருந்தனர். இவர் பின்னாளில் இந்தப் பத்திரிகையினை இணையதள வடிவமாக ஆன்லைன் எடிஷன் என கொண்டு வந்தார். அதன் மூலம் உலக அளவில் சுதர்மா சம்ஸ்கிருத பத்திரிக்கையை கொண்டுசென்ற சிறப்பை பெற்றார்.

sampathkumar sudharma1 - 2025

சம்பத்குமார் நஞ்சன்கூடு நகரில் உள்ள கலாலே கிராமத்தில் பிறந்தார். இவர் பிகாம் மற்றும் பிஎல் பட்டங்களைப் பெற்றார். மகாராஜா சம்ஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்ற இவர் தமது தந்தைக்கு உதவியாக சமஸ்கிருதம் தொடர்பான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

சுதர்மா பத்திரிகையின் பொறுப்பை நிர்வகிப்பது முதல் அனைத்து பணிகளையும் கவனித்து வந்த இவர், மைசூரு நகரில் டெஸ்க்டாப் பப்ளிஷிங் கொண்டு வந்த முதல் நபர். 1988 இல் இவரது அச்சுக் கூடம் இங்கே தொடங்கப் பெற்றது.

sampathkumar sudharma2 - 2025

இவர் 2009 இல் நாட்டின் முதல் சமஸ்கிருத கேலண்டர் – நாள்காட்டியை கொண்டு வந்தார். இவர் சமூகப் பணிகளிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். இவர்களது பணிகளைப் பாராட்டி, கடந்த 2020 ஆம் வருடம் இவருக்கும் இவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் கலை இலக்கியம் கல்வி இதழியல் துறைக்கான பத்மஸ்ரீ விருது பாரத அரசால் வழங்கப்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories