‘சுதர்மா’ சம்ஸ்க்ருத நாளிதழ் ஆசிரியர் சம்பத்குமார் காலமானார்!

sampathkumar sudharma - 2026
सुधर्मा ஸுதர்மா Sudharma ஸம்ஸ்க்ருத நாளிதழின் ஆசிரியர் ஸ்ரீமான் ஸம்பத் குமார் ஆசார்யன் திருவடி அடைந்தார்! ஓம் ஸாந்தி ஓம்!

உலகின் ஒரே சமஸ்கிருத நாளிதழான சுதர்மா பத்திரிகையின் ஆசிரியர் சம்பத்குமார் நேற்று மாரடைப்பால் காலமானார்.

கே.வி. சம்பத்குமார் இந்தியாவின் ஒரே சம்ஸ்கிருத நாளிதழான சுதர்மா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். கடந்த 31 வருடங்களாக இதை தொய்வின்றி நடத்தி வந்தார். இவர் புதன்கிழமை நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.

சுதர்மா இதழ் இவரது தந்தை கலாலே நடாதூர் வரதராஜ ஐயங்கார் என்பவரால் நிறுவப்பட்டது. மைசூரு நகரத்தைச் சேர்ந்த மிகப்பெரும் சம்ஸ்கிருத அறிஞரான இவர் 1970 ஜூலை 15-ஆம் நாள் இதனை நிறுவினார். 1990 ஆம் வருடம் அவரது மறைவுக்குப் பிறகு சம்பத்குமார் மற்றும் அவரது மனைவி விதூஷி கே எஸ் ஜெயலட்சுமி ஆகியோர் இந்த இதழை ஏற்று திறம்பட நடத்தி வந்தனர்.

சுதர்மா இதழுக்கு 3,500 அதிதீவிர வாசகர்கள் உலகம் முழுவதும் இருந்தனர். இவர் பின்னாளில் இந்தப் பத்திரிகையினை இணையதள வடிவமாக ஆன்லைன் எடிஷன் என கொண்டு வந்தார். அதன் மூலம் உலக அளவில் சுதர்மா சம்ஸ்கிருத பத்திரிக்கையை கொண்டுசென்ற சிறப்பை பெற்றார்.

sampathkumar sudharma1 - 2026

சம்பத்குமார் நஞ்சன்கூடு நகரில் உள்ள கலாலே கிராமத்தில் பிறந்தார். இவர் பிகாம் மற்றும் பிஎல் பட்டங்களைப் பெற்றார். மகாராஜா சம்ஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்ற இவர் தமது தந்தைக்கு உதவியாக சமஸ்கிருதம் தொடர்பான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

சுதர்மா பத்திரிகையின் பொறுப்பை நிர்வகிப்பது முதல் அனைத்து பணிகளையும் கவனித்து வந்த இவர், மைசூரு நகரில் டெஸ்க்டாப் பப்ளிஷிங் கொண்டு வந்த முதல் நபர். 1988 இல் இவரது அச்சுக் கூடம் இங்கே தொடங்கப் பெற்றது.

sampathkumar sudharma2 - 2026

இவர் 2009 இல் நாட்டின் முதல் சமஸ்கிருத கேலண்டர் – நாள்காட்டியை கொண்டு வந்தார். இவர் சமூகப் பணிகளிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். இவர்களது பணிகளைப் பாராட்டி, கடந்த 2020 ஆம் வருடம் இவருக்கும் இவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் கலை இலக்கியம் கல்வி இதழியல் துறைக்கான பத்மஸ்ரீ விருது பாரத அரசால் வழங்கப்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories