December 6, 2025, 7:29 AM
23.8 C
Chennai

வரதட்சணை கொடுமை: தர இயலாது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்!

woman 2
woman 2

திருமணமாகும் பெண்களுக்கு, மாப்பிள்ளை வீட்டாரால் வரதட்சணை கேட்டு இழைக்கப்படும் அநீதிகள் ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கவே செய்கின்றன.

சமீபத்தில் கேரளாவில் 23 வயது இளம்பெண் விஸ்மயா, வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி வீட்டின் குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு அடுத்தடுத்து பல குடும்ப வன்முறை தொடர்பான புகார்களையும் வெளியே கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கிடைக்காத விரக்தியில் திருமணமான இளம் பெண் ஒருவரை, அவரின் கணவரே நண்பர்களை வைத்து பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கொடூரம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் பசேரி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு எனது கணவரும், அவருடைய வீட்டாரும் கூடுதலாக வரதட்சணை பெற்று வருமாறு என்னை துன்புறுத்தி வந்தனர்.

ஒரு கட்டத்தில் என்னுடைய பெற்றோரால் கூடுதல் வரதட்சணை தர இயலாது என்பதை தெரிந்து கொண்ட எனது கணவர், என்னையும், எனது வீட்டாரையும் பழிவாங்க விபரீத முயற்சியை கையாண்டார்.

கடந்த சனிக்கிழமையன்று எனது கணவர் அவருடைய நண்பர் ஒருவரை கூட்டி வந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்தார்.

நான் சுதாரிப்பதற்குள் மறுநாள் அவருடைய மற்றொரு நண்பரை கூட்டி வந்து என்னை மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்ய வைத்தார்.

எனது கணவரும், அவரது நண்பரும் என்னுடைய பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி என்னை சித்ரவதை செய்தனர்.

பின்னர் இது குறித்து எனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வந்து என்னை மீட்டனர். என காவல்நிலையத்தில் அந்த பெண் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறை தங்களை தேடுவதை அறிந்து தலைமறைவாகி உள்ளனர்.

இந்த வழக்கை டி.எஸ்.பி ஒருவர் விசாரித்து வருவதாகவும், போலீஸ் குழு ஒன்று தலைமறைவாக இருப்போரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories