February 23, 2026, 4:13 AM
25.9 C
Chennai

வரதட்சணை கொடுமை: மாமனார் முன்பு மருமகளை நிர்வாணமாக்கிய மாமியார்!

woman3
woman3

வரதட்சணை கொடுமையால் கேரளாவில் இளம்பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய எடுத்திருக்கும் நிலையில் ராஜஸ்தானில் வரதட்சணை கொடுமையினால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பாகூரைச்சேர்ந்தவர் பைருலால். இவரின் மகள் பிரியாவுக்கும் பந்திர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் சான்சிக்கும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னர் பிரியாவிடம் வரதட்சணை கேட்டு முகேஷ் சான்சியின் பெற்றோர் கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் கணவரின் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் பிரியா.

சில நாட்கள் கழித்து முகேஷ் சான்சி பெற்றோர் பிரியாவிடம் சமாதானம் பேசி அவரை மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் வீட்டிற்கு சென்ற பின்னர் எப்போதும் போல் பிரியாவிடம் வரதட்சணை கேட்டு மீண்டும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த வரதட்சணை கொடுமையின் உச்சகட்டமாக பிரியாவை மாமனாரின் முன்னால் நிர்வாண படுத்தியிருக்கிறார் மாமியார்.

இந்த அவமானம் தாங்காமல் பிரியா விஷம் குடித்ததால், கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பிரியா ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பம் என்னை ரொம்ப சித்திரவதை செய்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.

மாமனார் முன்னிலையிலேயே நிர்வாணப்படுத்தியதால் அவமானம் தாங்காமல் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்ட போலீசார் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories