8 பேரை ஏமாற்றி மணந்த பெண்ணிற்கு எய்ட்ஸ்! கணவர்களைத் தேடும் காவலர்கள்!

Published:

register-marriage
register-marriage

ஹரியானா மாநிலம் பட்டியாலா காவல்துறைக்கு சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர் தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து சில ஆண்களை ஏமாற்றியுள்ளதாக புகார் ஒன்று வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த வாரம் காவல்துறையினர் இந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளன.

அந்தப் பெண் ஹரியானா மாநிலத்தின் கைத்தால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாம்.

இவர் தன்னுடைய அம்மா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வேகமாக பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டி, அதற்காக சில ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை அவர் 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் பணத்தை எடுத்துக் கொண்டு இவர் தற்போது தலைமறைவாக இருந்துள்ளார். அவரை காவல்துறையினர் தேடி கண்டு பிடித்துள்ளனர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

பின்னர் அந்த பெண்ணுக்கு காவல்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு ஹெச்ஐவி எய்ட்ஸ் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் திருமணம் செய்த 8 பேரையும் அடையாளம் கண்டறிந்து காவல்துறையினர் எய்ட்ஸ் நோய் தொடர்பான பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணையில் அந்தப் பெண் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு பெண் 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த ஆண்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈட்டுபட்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img