புராதனமான விநாயகர் சிலை மீது ஷூ காலால் மிதித்து போட்டோ வெளியிட்ட அர்பஸ்கான்!

Published:

Arbuscon
Arbuscon

இந்து மதக் கடவுளான விநாயகர் சிலையை அவமதிப்பது போன்ற புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் கிழக்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள டென்கலங்சோ கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத கடவுளான விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

இது மிகவும் பழமையான சிலை மற்றும் புராதனமான சிலை என்பதால் அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் என்ற இளைஞன் இந்து மத விநாயகர் சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு அணிந்தவாறு தனது காலை விநாயகர் சிலை மீது வைத்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் கண்டனங்களை எழுப்பி வந்தனர்.

பல தரப்பினரும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இந்து மதக் கடவுளை அவமதித்தது மற்றும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது போன்ற குற்றங்களின் கீழ் அர்பஸ்கானை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Related articles

Recent articles

spot_img