December 5, 2025, 3:47 PM
27.9 C
Chennai

மோடியின் அரசு தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது; பத்ம விபூஷண் விருதுக்கு இளையராஜா மகிழ்ச்சி!

சென்னை:
மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விபூஷண் விருதுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் வெளிப்பாடு இது என்று மகிழ்ச்சியுடன் கூறினார் இசையமைப்பாளர் இளையராஜா.

விருது குறித்து தன்னிடம் செய்தித் துறை அதிகாரி பேசியதாகவும், விருதினை ஏற்றுக் கொள்ள சம்மதமா என்று கேட்டதாகவும் கூறிய இளையராஜா, தான் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொள்வதாகக் கூறினேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அந்த நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்வதாகவும் கூறினார்.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவப் படுத்தும் விதமாக மத்திய அரசு உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடம் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் கமலஹாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த். நடிகர் கமல் வழக்கம் போல் உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்னக்கிளி என்ற படத்துக்கு 1976ல் இசை அமைத்து, தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜாவுக்கு ஏற்கெனவே கடந்த 2010ம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப் பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர். 1988-ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது பெற்றிருக்கிறார்.

இன்று அறிவிக்கப் பட்டுள்ள பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள்…

கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98)
அரவிந்த் குப்தா – இலக்கியம் & கல்வி
லட்சுமிகுட்டி – மருத்துவம்
பாஜு ஷியாம் – கலை
சுதன்ஷு பிஸ்வாஸ் – சமூக சேவை
எம்.ஆர். ராஜகோபால் – மருத்துவம்
முர்லிகந்த் பெட்கர் – விளையாட்டு
ராஜகோபாலன் வாசுதேவன் – அறிவியல் மற்றும் பொறியியல்
சுபாஷினி மிஸ்ட்ரி – சமூக சேவை
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் – இலக்கியம் மற்றும் கல்வி
சுளகட்டி நரசம்மா – மருத்துவம்
யீஷிதொடன் – மருத்துவம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories