காவிரி விவகாரம்: அளவைக் குறைத்து 177.25 டிஎம்சி என உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

புது தில்லி:

உச்ச நீதிமன்றத்தில் இன்று காவிரி நீர் பகிர்வு தொடர்பான இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், தமிழகத்துக்கு கர்நாடகம் 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது, முந்தைய அளவைக் காட்டிலும் குறைவு என்றாலும், இதுவரை நீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அரசு நீர் வழங்கியதில்லை.

காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவெடுக்க, காவிரி நடுவர் மன்றம் 1990ல் அமைக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்த வழக்கில், 2007ல் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இது தொடர்பான அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்தவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் 2017 செப். 20 ல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதுவும் மேல் முறையீடு செய்ய இயலாத இறுதித் தீர்ப்பு என்பதால், இது குறித்து பலத்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவி வந்தது. இரு மாநில சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை தமக்கு என உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை. காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு கட்டாயம் தர வேண்டும். தமிழகத்தில் 20 டி.எம்.சி., அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. பாசன வசதியைப் போல் குடி நீருக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, கர்நாடகாவிற்கு முன்பு ஒதுக்கீடு செய்திருந்ததை விட கூடுதலாக 14.75 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்.

கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என முன்னர் ஒதுக்கீடு செய்து அறிவித்ததில் எந்த மாற்றமுமில்லை என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த முறை, தமிழகம் 264 டிஎம்சி தண்ணீர் கேட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே அறிவித்திருந்த தண்ணீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், கர்நாடகம் அந்த அளவுக்கு முழு அளவிலான தண்ணீரை காவிரியில் திறந்து விட்டதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் சொல்லி அளவைக் குறைத்தே திறந்து விட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் 177.25 டிஎம்சி என்ற அளவை உறுதி செய்துள்ளது. இந்த அளவையாவது கர்நாடகம் இனி வழங்குமா என்பது பலரின் ஆதங்கம். காரணம், தமிழகம் இந்தத் தீர்ப்பால் வஞ்சிக்கப் பட்டதாகத் தான் தோற்றம் அளிக்கிறது. இருப்பினும்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories