மும்பை : காதலர் தினம் என பிப்ரவரி 14ம் தேதியை உலகின் பல நாடுகளில் இளையோர் கொண்டாடுகையில், அந்த தினத்தை அன்னையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம். இந்தப் புது நடைமுறை, மகாராஷ்டிராவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

