புதுதில்லி: உடல் நிலையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கேஜ்ரிவாலிடம் கிரண் பேடி அறிவுரை கூறினார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் இணைந்து வேலை செய்த அரவிந்த் கேஜ்ரிவாலும் கிரண் பேடியும் தில்லி சட்டசபைத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டனர். கேஜ்ரிவால் முதல்வராகி விட்டார். கிரண் பேடி தோல்விக்கு தானே பொறுப்பு என்று கூறிவிட்டார். இந்நிலையில் நேற்று தில்லி காவல் ஆணையர் பீம் சைன் பஸ்சி அளித்த விருந்து நிகழ்ச்சியில், கேஜ்ரிவாலும், கிரண் பேடியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கிரண் பேடிக்கு கேஜ்ரிவால் வணக்கம் தெரிவித்தார். இருவரும் சற்று நேரம் உரையாடினர். அப்போது, கேஜ்ரிவாலிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்த கிரண் பேடி, உடல்நிலையை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

