
பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, இன்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை ஆகியவற்றின் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், புது தில்லியில் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் இன்று பங்கெடுத்து ஆற்றிய உரையின் தமிழாக்கம்!
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
வணக்கம். உங்கள் அனைவருக்கும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பலப்பல நல்வாழ்த்துக்கள். இனிய பொங்கல், நல்வாழ்த்துக்கள். பொங்கல் பவித்திரமான நாளன்று, தமிழ்நாட்டின், ஒவ்வொரு வீட்டிலிருந்தும், பொங்கலின் பெருக்கு பொங்கிப் பல்குவது வழக்கம். என் விருப்பம் என்னவென்றால், அதைப் போலவே, உங்கள் வாழ்க்கையிலும் கூட, சுகங்கள், நல்வளம், மேலும் சந்தோஷம் இடையறாது பொங்கிப் பெருகட்டும்.
நிரந்தரமாக இது தொடர்ந்து இருக்க வேண்டும். நேற்றுத் தான் தேசத்திலே, லோஹ்டி திருநாள், பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சிலர் இன்று, மகர சங்க்ரமணு…… உத்தராயணத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் சிலரோ அதை நாளை கொண்டாடுவார்கள். மாக பிஹுவும் கூட, தொடர்ந்து வரவிருக்கின்றது. இந்த அனைத்துத் திருநாட்கள் தொடர்பாக, நாட்டுமக்கள் அனைவருக்கும், பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, இங்கே என்னால், பல, பரிச்சயமான முகங்களைக், காண முடிகிறது. கடந்த ஆண்டும் கூட, நாமனைவரும், தமிழ் புத்தாண்டு வேளையிலே, இங்கே சந்தித்திருக்கிறோம். நான் முருகன் அவர்களுக்கு, என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இவர் தான், இந்த அற்புதமான நிகழ்ச்சியில் எனக்கு, பங்கெடுக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால், ஏதோ நான், என்னுடைய குடும்பம், மற்றும் நண்பர்களோடு கூட, கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போல உள்ளது.
நண்பர்களே, புனிதர் திருவள்ளுவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும், சேர்வது நாடு. அதாவது, நல்ல விளைபொருளும், தக்க அறிஞரும், மேலும் நாணயமான வணிகர்கள், இந்த மூவரும் இணைந்து, தேசத்தை நிர்மாணம் செய்கிறார்கள்.
புனிதர் திருவள்ளுவர் அரசியல்வாதிகளைக் குறிப்பிடவில்லை. இது நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் செய்தி. பொங்கல் திருநாளன்று, புதிய விளைபொருளை, இறைவனின் திருவடிகளில் படைக்கும் பாரம்பரியம் இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த கொண்டாட்டப் பாரம்பரியத்தின் மையத்திலே, நமக்கெல்லாம் உணவு படைக்கின்ற, உழவர் பெருமக்கள் இருக்கின்றார்கள். இதைப் போலவே, பாரதத்தின் அனைத்துப் பண்டிகைகளும், ஏதோ ஒரு வடிவத்திலே, கிராமத்தோடு, உழவர்களோடு, விளைபொருட்களோடு இணைந்திருக்கின்றது.
எனக்கு நினைவிருக்கிறது, கடந்த முறை நாம், மேலும் ஒரு விஷயம் குறித்தும் விவாதித்தோம். அதாவது எப்படி நம்முடைய சிறுதானியங்கள், அல்லது ஸ்ரீ அன்னம், தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்திருக்கிறது என்று. எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, இந்த சூப்பர் உணவு தொடர்பாக, தேசத்திலும், மொத்த உலகிலும் கூட, ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
நமது இளைஞர்கள் பலரும், சிறுதானியங்கள், ஸ்ரீ அன்னம் தொடர்புடைய, பல புதிய ஸ்டார்ட் அப்புகளை தொடங்குகிறார்கள். மேலும் இந்த ஸ்டார்ட் அப்புகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. சிறுதானியங்களை விளைவிப்பதிலே, நமது தேசத்தின், 3 கோடிக்கும் மேற்பட்ட, சிறு விவசாயிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். நாம், சிறுதானியங்களை முன்னிறுத்தும் போது, அப்போது நேரடியாக, 3 கோடி விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது.
நண்பர்களே, பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ் பெண்கள், தங்கள் இல்லங்களுக்கு முன்பாக, கோலம் போடுவது வழக்கம். முதன்மையாக, அவர்கள் அரிசிமாவைப் பயன்படுத்தி தரையினிலே, பல புள்ளிகளை வைக்கிறார்கள். அனைத்துப் புள்ளிகளும் போட்டு முடிக்கப்பட்டு விட்ட பின், ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு முக்கியத்தும் இருக்கிறது. இந்தக் காட்சியே கூட, மனதைக் கொள்ளை கொள்ளும் ஒன்றாகும்.
ஆனால் கோலத்தின் உண்மையான வடிவம், மெருகூட்டப்பட்டதாக எப்போது இருக்கும் என்றால், அந்தப் புள்ளிகள் அனைத்தும், நன்கு இணைக்கப்படும் போது, இது ஒரு கலைப்படைப்பாக மாற்றமடைந்து, அதிலே வண்ணங்கள் சேர்க்கப்படும் போது தான். நம்முடைய தேசமும், அதனுடைய பன்முகத்தன்மையும் கூட, கோலத்தைப் போன்றது தான்.
தேசத்தின் அனைத்து இடங்களும், ஒன்றோடு ஒன்று உணர்வுப்பூர்வமாக இணைகின்ற போது தான், நம்முடைய சக்தியானது, ஒரு பிரத்யேகமான வடிவத்தை எடுக்கிறது. பொங்கல் திருநாளும் கூட, இப்படிப்பட்ட ஒரு திருநாள் தான். இது, ஒரே பாரதம் உன்னத பாரதத்தின், தேச உணர்வினை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
கடந்த காலத்திலே, காசி தமிழ் சங்கமம், மற்றும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம், என்ற ஆழமான மகத்துவமான பாரம்பரியம் தொடங்கப்பட்டிருக்கிறன. இவற்றிலும் கூட, இந்த உணர்வு, பிரதிபலிக்கிறது, இந்த உணர்வை, உணர முடிகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலுமே, அதிக எண்ணிக்கையிலே, நம்முடைய தமிழ் சகோதர சகோதரிகள், உற்சாகத்துடன் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.
நண்பர்களே, ஒருமைப்பாட்டின் இதே உணர்வு தான், 2047ஆம் ஆண்டு வரை, வளர்ச்சியடைந்த பாரதத்தை நாம் அமைக்க, மிகப்பெரிய சக்தியாகும், மிகப்பெரிய மூலதனமாகும். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், செங்கோட்டையிலிருந்து நான், எந்த 5 உறுதிப்பாடுகள் குறித்து அறைகூவல் விடுத்திருந்தேனோ, அதன் அடிநாதமான விஷயம், தேசத்தின் ஒற்றுமைக்கு சக்தி அளிப்பது, தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவது, பொங்கலின் இந்த புனிதமான வேளையிலே, நாம் தேசத்தின் ஒற்றுமையை, சக்தியுடையதாக ஆக்கும், சங்கல்பத்தை மீண்டும் மேற்கொள்ள வேண்டும்.
நண்பர்களே, இன்று என்னிடம் கூறப்பட்டிருக்கிறது, பல கலைஞர்களும், மேலும், பிரபல கலைஞர்கள்….. பெயர் பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி அளிப்புக்குத் தயாராக இருக்கிறார்கள். நீங்களும் காத்திருக்கின்றீர்கள் நானுமே கூட காத்திருக்கின்றேன்.
இந்தக் கலைஞர்கள் அனைவரும், தலைநகர் தில்லியிலே, தமிழ்நாட்டினை, மேலும் துடிப்புடையதாகச் செய்ய இருக்கிறார்கள். சில கணங்கள் தமிழை சுவாசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இதுவும் ஒரு பெரும் பேறாகும். நான் இந்தக் கலைஞர்கள் அனைவருக்கும், என் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மீண்டும் ஒருமுறை, முருகன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். வணக்கம்.




