December 6, 2025, 7:42 AM
23.8 C
Chennai

IPL 2024: கடைசி பந்தில் சிக்ஸ்; த்ரில் வெற்றி!

ipl 2024 - 2025

இருபத்திமூன்றாம் நாள்

ஐபிஎல் 2024 – 13.04.2024 – முல்லன்பூர்

பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் அணியை (147/8, அஷுதோஷ் ஷர்மா 31, ஜித்தேஷ் ஷர்மா 29, லிவிங்க்ஸ்டோன் 21, ஆவேஷ் கான் 2/34, கேஷவ மஹராஜ் 2/23) ராஜஸ்தான் அணி (152/7, யஸஷ்வி ஜெய்ஸ்வால் 39, ஹெட்மேயர் 27, தனுஷ் கோடியான் 24, ரியன் பராக் 23, ரபாடா 2/25) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் இன்று ஷிகர் தவான் உடல்நலக் குறைவு காரணமாக விளையாடவில்லை. சாம் கரண் அணியின் தலைவராகச் செயல்பட்டார்.

தொடக்க வீரராக தவானுக்குப் பதிலாக அதர்வா தைய்தே இறங்கினார். தொடக்கம் முதலே பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறினர். அதர்வா தைய்தே (15 ரன்), ஜானி பெயர்ஸ்டோ (15 ரன்), பிரப்சிம்ரன் சிங் (10 ரன்), சாம் கரன் (6 ரன்), ஷஷாங்க் சிங் (9 ரன்) எனப் பலர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

ஜித்தேஷ் ஷர்மா (29 ரன்), லிவிங்க்ஸ்டோன் (21 ரன்), அஷுதோஷ் ஷர்மா (31 ரன்) ஆகியோர் சற்று நிதானித்து ஆடியதால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது.

148 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் தனுஷ் கோடியான் (24 ரன்) 8.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் 12ஆவது ஓவர் வரை ஆடினார். 28 பந்துகளில் 39 ரன் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தார்.

அதன் பிறகு ராஜஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடமுயன்று சம இடைவெளியில் விக்கட்டுகளை இழந்து வந்தனர். சஞ்சு சாம்சன் (18 ரன்), ரியன் பராக் (23 ரன்), துருவ் ஜுரல் (6 ரன்), போவல் (11 ரன்), கேசவ் மஹராஜ் (1 ரன்) என அந்த அணியின் பேட்டர்கள் இன்று சோபிக்கவில்லை.

கடைசியில் ஷிம்ரன் ஹெட்மேயர் 10 பந்துகளில் 27 ரன் அடித்து வெற்றியைத் தேடித்தந்தார். அதுவும் அவருடைய கடைசிப் பந்து சிக்சர் அனைவரின் இதயத்துடிப்பை ஒரு விநாடி நிறுத்தியது எனச் சொல்லலாம். எளிதாக வெல்ல வேண்டிய ஒரு ஆட்டத்தை கடைசி பந்துவரை இழுத்து ராஜஸ்தான் அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஷிம்ரன் ஹெட்மேயர் தன்னுடைய சிறப்பான ஃபினிஷிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஞாயிற்றுகிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.     

13.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 651100.767
கொல்கொத்தா43161.528
சென்னை53260.666
லக்னோ53260.436
ஹைதராபாத்53260.344
குஜராத்6336-0.637
மும்பை5234-0.073
பஞ்சாப்6234-0.218
டெல்லி6244-0.975
பெங்களூரு6152-1.124

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories